மீண்டு(ம்) வந்தேன்... - தங்கமணி சுவாமினாதன்
2015...
நவம்பரில் தீபாவளிக்கு முன்னதாய்--ஓர் மாலை நேரம்..
சூரியன் மறையும் அந்தி வானம்...
சின்னச் சின்னதாய்த் தவிட்டுத் தூரல்..
"மூத்த குடிமகளாகி" மூவிரு ஆண்டுகளாகியும்..
எந்தன் பாதி வயதிற்கும் குறைவான-இளம்..
தோழிகள் பலரோடு.."மௌனராகம்" ரேவதி போல்..
பாடுப்பாடி,ஆட்டம் ஆடி மழையில் நனைந்து நனைந்து..
உற்சாகத் துள்ளளோடு..ஹோ..ஹோ..வெனச் சத்தமெழுப்பி..
மகிழ்ச்சியின் உச்சத்தில்...இருந்தேன் நான்...
முழுவதுமாய் நனைந்தபின் வீட்டுக்குள் வந்தபோது..
போட்ட ஆட்டத்திற்குக் கூலியாய்..
அனியாயத்துக்குக் காய்ச்சல்....
விடாத காய்ச்சலால் படுத்தாச்சு ஏழு நாட்கள்...
தீபாவளி "எண்ணை" எனைப் பார்த்துக் கேலியாய்ச் சிரித்தது..
ஜுரம் விட்டு நலம் பெற்றும் மழை மட்டும் தொடர்ந்தது...
விட்டு விட்டு பெய்த மழை பின் விடாமல் பெய்தது...
மழையளவு கூடக் கூட தெருவில் காட்டாற்று வெள்ளம்..
கொஞ்சம் கொஞ்சமாய் ஒட்டகம் கூடாரம் நுழைந்ததுபோல்..
அழையாத விருந்தாளியாய் வெள்ளனீர் அகத்திற்குள் நுழைந்தது..
அங்கிங்கெனாதபடி வெள்ள நீர் வீடெங்கும் அலையடிக்க...
அள்ளி அள்ளி நீரை வாசலுக்கு வழியனுப்ப..
ஆத்திரத்தோடு தண்ணீர் ஆர்ப்பரித்துத் திரும்பி..
அறையடி ஓரடி என்று ஆறடியைத் தொட்டது ..
எதை எடுக்க?..பத்திரமாய் எதை வைக்க?..எங்கேதான் வைக்க?...
உயிரை உடலில் "தக்க வைத்தால்" போதுமென்று..
மூன்றாம் தளம் தாண்டி மொட்டை மாடியில் அடைக்கலம்..
உணவில்லை குடினீர் இல்லை உடுத்த உடை இல்லை...
மகனோடு மகளோடு மற்ற சுற்றங்களோடு பேச இயலவில்லை..
மின்சாரமில்லா இருட்டிரவில் தண்ணீரோடு தவித்துத் தவித்து..
வான் வழியாய் வீசப்பட்ட "சோற்று மூட்டைக்கு"..
ஆலாய்ப் பறந்து ஓடி ஓடி அலைந்தபோது...
இதயம் விண்டது..என்" அகந்தை" அழிந்தது...
பண மென்ன?பதவி என்ன? ஆளென்ன?படையென்ன?..
நீயாராக இருந்தாலும்..எனெக்கொன்றும் பயமில்லை..
பஞ்சு மெத்தையில் படுக்கும் நீயும்....
பிளாட்பாரத்தில் உறங்கும் ஏழையும்..
இயற்கையின் முன் ஒன்றேதான் என..
வானத்து "சுனாமி"..வாழ்க்கையின் எதார்த்தம் சொல்ல..
வானம் விட்டு கீழே வந்ததோ?
அனைத்தையும் இழந்து அகதிபோல் ஆகி நின்றேன்..
சிரிப்பை மறந்து விட்டேன்..சிந்திக்கத் தொடங்கி விட்டேன்..
வாழ்க்கையின் அர்த்தம் முழுதாய்ப் புரிந்த பின்..
சின்னதாய்ச் சிரித்திடுவேன்...
மமதை நீக்கி இனி மனிதம் காத்திடுவேன்.....
{kunena_discuss:779}