மாறுவோம்... - அமீர்
உலகம் சுற்றுகிறது
என்பது உண்மை
ஆனால்...
அறம் விழுங்கும்
மாமிச பட்சிணிகள்
வெறிபிடித்த
போய் போல் விரட்ட
கையில்
உயிர் பிடித்து
ஓடுகிறது உலகம்
என்பதே பேருண்மை!
பிதாமகனாக
அவ்வப்போது காலம் மாறிவிட
எதற்காக உலகில்
சதா எமனாக மாறுகிறது
இந்த
தீராத தீவிரவாத கலகம்!
எந்த நூல் சொன்னது
எந்த இறைவன் சொன்னது
என் பெயரில்
நரவேட்டை நடத்துங்கள்
சிரம் அறுத்து எறியுங்கள்
சொர்க்கம் உங்களுக்கென்று!
எந்த ஞாபகமும்
இருக்கவில்லை
எந்த ஆன்மீகமும் சொல்லவில்லை
வன்முறையை ஆதரிப்பவன்
உன் இறைவனென்று!
வேதம் வெறுக்கும்
தீவிரவாதம்
வேர்விட்டு வென்றதென்ன இன்றுவரை?
இந்த வாதம் மறந்துவிட்டு
மனிதம்
மாண்டுபோகுமோ கடைசி வரை?
சக்ரவர்த்திகளே
சாம்ராஜ்ய அதிபதிகளே
மண்ணாசையும்
மகுட ஆசையும்
நீங்கள் வளர்த்துக்கொள்ளுங்கள்
மார் நிமிர்த்தி
வாள் உயர்த்தி
போர் நடத்திக் கொள்ளுங்கள்
ஆனால்
பிஞ்சுகளை பிள்ளைகளை
விட்டுவிடுங்கள்
மூத்தகுடிகளையும்
தாய்களையும்
அவர்களோடு இருக்கவிடுங்கள்.
இல்லையேல்
புதர்மண்டி போய்விடும்
இந்தபூமி!
முள்வனமாய் மாறிவிடும்
இந்த பிருந்தாவனம்!
சூடிடுவோம்
அவரவர்க்கு பிடித்த பூக்களை!
தடுத்திடுவோம்
பரவும் மதவாத தீக்களை!
குறிப்பு; இது சென்ற மாதம் பாகிஸ்தான் ராணுவ பள்ளி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 130 குழந்தைகள் இறநதனர்.அந்த தாக்கத்தில் எழுதியது.