இவன் என் கவிதை!! - அமுதா
* நீண்ட தூரம் என்னை நீங்கி போகாதே!
நீ திரும்பும் வேளையிலே.....காலம்.....
என்னை பேச விடாதே!!
* கண்ணீன் எல்லை நீ கடக்கையிலே,
கண்ணீர் போடும், வெந்நீர் திரையிலே.....
விழிகள் வெறும் புண்ணாகுமே!!
* யாரோடும் இந்த மனம் சேரவில்லையே!
ஆராய்ந்தால் என்இதயம் எனதாய் இல்லையே!
எடுத்துப்போன நீயும் தரவே இல்லையே!!
* வேறொருவர் கைபிடிக்க எனக்கு,
வேறு கைகள் இல்லையே.....
உன்னை விட்டு எட்டிப் போக,
ஏனோ கால்கள் வரலையே.....
* என் உள்ளம் ஏங்கிய கவிதை நீயே!!
இனிய தேடலின் இனிக்கும் முடிவும் நீயே!!
இறைவன் எனக்குத் தந்த வரமும் நீயே!!
எல்லா உறவுமாய் என் முன்னால் நின்றாயே!!!