(Reading time: 1 minute)

இவன் என் கவிதை!! - அமுதா

* நீண்ட தூரம் என்னை நீங்கி போகாதே!

  நீ திரும்பும் வேளையிலே.....காலம்.....

  என்னை பேச விடாதே!!

 

* கண்ணீன் எல்லை நீ கடக்கையிலே,

  கண்ணீர் போடும், வெந்நீர் திரையிலே.....

  விழிகள் வெறும் புண்ணாகுமே!!

 

* யாரோடும் இந்த மனம் சேரவில்லையே!

  ஆராய்ந்தால் என்இதயம் எனதாய் இல்லையே!

  எடுத்துப்போன நீயும் தரவே இல்லையே!!

 

* வேறொருவர் கைபிடிக்க எனக்கு, 

  வேறு கைகள் இல்லையே.....

  உன்னை விட்டு எட்டிப் போக,

  ஏனோ கால்கள் வரலையே.....

 

* என் உள்ளம் ஏங்கிய கவிதை நீயே!!

  இனிய தேடலின் இனிக்கும் முடிவும் நீயே!!

  இறைவன் எனக்குத் தந்த வரமும் நீயே!!

  எல்லா உறவுமாய் என் முன்னால் நின்றாயே!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.