எங்கே நீ!! - அமுதா
* காற்றலை போல் - கண்மூடித்தனமாக,
காணும் இடமெல்லாம் தேடினேன்!
எங்கே நீ என்று!!
* கடலலை போல் - கதறலோடு
கடற்கரை வெளியெல்லாம் தேடினேன்!
எங்கே நீ என்று!!
* அக்னி ஜுவாலை போல் - ஆவேசமோடு
அங்குமிங்கும் அலைந்து தேடினேன்!
எங்கே நீ என்று!!
* நிலத்தில் நிலை கொண்டவை எல்லாம்
நீயாக கூடாதா என நேசத்தோடு தேடினேன்!
எங்கே நீ என்று!!
* அண்டவெளியிலாவது அகப்பட மாட்டாயா என
ஆகாய மேகமாய் அங்கலாயித்து தேடினேன்!
எங்கே நீ என்று!!
* ஐந்து சக்திகுள்ளும் அடங்காத உன்னை,
தேடித்தேடி ஓய்ந்த நான்.....தேடலின் முடிவில்.....
அமைதியின் ஆழத்தில்.....அறிந்து கொண்டேன்!
எங்கே நீ என்று!!
* ஆம்.........
எனக்குள்ளேயே நீ.....மிகமிகப் பத்திரமாக!!!