(Reading time: 1 minute)

என் உயிர் தோழிக்கு... - புவனி

உன் கருவறையை

எனக்கு வரமாய் தந்தாய்...

உன் கண்ணின் கருவிழி போல்

கணபொழுதும் எனை காத்தாய்

என் கண்களை பார்த்து

என் கனவுகளை சொன்னாய்

உன் பிஞ்சு மொழியில்

நான் பலனூறு பாஷைகள்

கற்றேன் என்று பெருமிதம் கொண்டாய்

உன் சுமையைய் நான்

சுகமாக்கினேன் என்றாய்

என் வரமாய் இந்த மண்ணில்

யாதுமாகி நின்றாய்...

ஒரு தோழியாகவா இல்லை

ஒரு தாயாகவா...

சொல்ல தெரியவில்லை எனக்கு

எல்லம் புரிந்து கொள்ளும் உன்னிடமே

என் கண்கள் உன்னை விட்டு அகலாமல்

என் கல்லறை வரை

உன் துணை வேண்டும் என்று...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.