(Reading time: 2 - 3 minutes)

பூங்காற்றும் உன் பெயர் சொல்லும் - புவனி

Friends

யார் என்றக் கேள்வியில் அழகாய்

மலர்ந்தன நம் நட்பின் மலர்கள்

அறிமுகங்கள் தந்த நம் சிநேகம்

நம் தயக்கங்களை உடைத்து

நம் நேசத்தை வளர்த்தது

நாம் செய்த சேட்டைகள்

நாம் செய்த குறும்புகள்கள்

நம்மை கண்டாலே நாம் செய்த

செயல்களில் மிரலும் ஆசிரியர்கள்

நம் வகுப்பறை நம் நினைவு

நம் கோபங்கள் நம் கெஞ்சல்கள்

இப்படி பல உருவமாய் நீ பதிந்துவிட்டாய்

என்னுள் உன் பாசத்தை பொக்கிஷமாக்கி

பிரிவென்ற சொல்லுக்குள் தான்

எத்தனை வலிகள் என்று உணர்ந்த்தோம்

நாம் அது நம்மை சூழ்ந்த நொடி

முகநூலில் உன்முகம் பார்க்க முடியும்

உன் குரல் கேட்க முடியும் ஏன் ?

உன்னுடன் உரையாட கூட முடியும்

ஆனால் என் துன்பங்களுக்கு எங்கிருந்தாலும்

தோள் கொடுக்கும் தோள்கள் கிடைக்குமா ?

என் கண்ணீர் துடைத்த விரல்கள்

நான் நினைத்த உடன் எனக்காக

வந்து நிற்குமா........

எல்லா சூழ்நிலையிலும் எனக்கு பலம்

கொடுத்த உன் வார்த்தைகள் தான்

நான் நினைத்த உடன் கிடைக்குமா?

எது எப்படி இருந்தால் என்ன

இடைவேளிகள் அதிகமில்லை நம்மிடையில்

நம் நினைவுகள் என்றும் உண்டு

நம் நட்பு என்னும் உயிர்வரியில்

புவியில் நீ எங்கு இருந்தாலும்

பூங்ககாற்றும் உன் பெயர் சொல்லும் பொழுது

பிரிவாஎன்ற சொல் நமக்கு எதற்கு

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.