விழியில் உன் விழியில் - புவனி
யாருமில்லா தனிமையில்
உன் நினைவுகளைப் போர்த்திக்கொண்டு
உனக்காக காத்திருக்கும் நொடிகளில்
உணர்கிறேன் நான்.......
காற்றைப் போல் என்னுள் நுழைந்து
சுவாசமாய் என்னில் புதைந்த உன் காதலை.......
கோபம் விட்டு நேசம் கொண்ட
என் உள்ளத்தை மறைத்து
உன்னை தவிக்கவிட நான் நினைத்த நொடியில்
என் கண் முன்னே நீ வந்தாய்
தாயிடம் மன்னிப்பு கேட்க்கும்
குழந்தைபோல் முகம் கொண்டு
உன்னை கண்டு புன்னகை பூக்கும்
என் இதழ்களை கண்டித்து
உன்னை முறைக்கத் தொடங்கிய மறுநிமிடம்
சிறுபிள்ளையாய் என் முன் மண்டியிட்டு
கண்கள் சுருக்கி செவிகள் தொட்டு
மொழிகள் மறுத்து மௌனத்தை சுமந்து
மன்னிப்புக் கேட்கும் உன் விழிகளில் வீழ்கிறேன் நான்……….
உன்னையே தந்து என்னையும் வென்றவனே
காத்திருக்கிறேன் நான் உன்னை சேரும் நாள்க்காக
{kunena_discuss:779}