(Reading time: 1 - 2 minutes)

வசந்த காலம் - நிலவினி

என் சன்னலோரம்......
சலசலசத்து கொண்டே இருந்தாய்......
கிளிகளுக்கு கொஞ்சம்....
காக்கைகளுக்கும்  மிஞ்சும்.....
 அணில்கள் சிலவும் எஞ்சும்........
 
கனவுகள் கொஞ்சம்.....
கற்பனையில் லயிக்கும் நெஞ்சம்....
நெருடும் நிஜங்கள்  அடையும் தற்காலிக தஞ்சம்.........
 
மரமாக நின்றாலும்.....
என் மனதில் வனமாகதான் நின்றாய்....
யதார்த்த வக்கிரங்களில் இருந்து எனை ஒளித்தாய்........
 
உன்னோடு என்  உறவு.....
நம் இருவர்க்கு மட்டுமே கண்கூடு.......
ஏனோ முறிந்து விட்டாய்.....
புயல் ஒன்றில் சரிந்தது  விட்டாய்......
முற்றிலும் இல்லை எனினும்........
சற்றிடம் கிளைகள் தவற விட்டாய்......
 
உன் பட்டமர கோலமும் எனக்கு  சளைக்கவில்லை....
மனம் அதில் லயிபதையும் நிறுத்த வில்லை......
 
நீ துளிர்பாய்  என்று காத்திருந்தேன்....
உன்னை நிதம் பார்த்திருந்தேன்.....
என் வசந்தத்திற்காக........
 
நீ எளிதில் துளிர்கவில்லை....
எனினும் மனம் உன்னை தவிர்க்கவில்லை.......
 
நீ துளிர்பாய் என்று ஏங்கி கிடந்தேன் 
வசந்தத்தை எண்ணி.....
இலை இல்லா உன் தரிசனம்...
தினம் எனை கவர்ந்தது நிதர்சனம் ...........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.