உன்னோடு....... - நிலவினி
என்னோடு நீ இருக்கிறாய்...
நீயே என் வாழ்வின் பொருள்
வாழ்வியலின் பெரும்பகுதி
செலவாவது உனக்காக...
உடன் பிறந்த உறவுகள் கூட
உயர்ந்தது அல்ல- உன் முன்னால்
பெற்றோர்கள் கூட பெரிதல்ல......
பெருமைக்கு முன்னால்....
நான் காயப்படுத்தப்பட்ட போது
தாங்கிய உள்ளம்.....
தகர்ந்தது நீ காயப்பட்ட போது...
நீயின்றி நானில்லை....
நானின்றி நீயில்லை....
உலகம் பலமுறை
உரசிப்பார்த்தும்
உடையவில்லை நாம்...
துயரங்களில் தனியாக
துவண்ட எனக்கு
துணையாய் நின்று
துணிவளித்து நீதாணே....
உன்னால் பெற்றது
சிறிது..
இழந்தவை சிலகூட
பெரிது....
ஆயினும் நான்
உன்னை விடவில்லை
பிரிந்து...
நான் குனிந்தேணும்
உனை நிமிர்த்துவன்....
ஏணெனில்
என்னிலும்-நீ
எனக்கு முக்கியம்....
வேறுயாறிவர்-உன்
மகத்துவம்....
உனக்காக நானில்லை....
எனினும்-நீ
எனக்காக வாய்க்கப் பெற்றாய்
என் தன்மாணமே...!