என்னருகே நீ இருந்தால்... - நிலவினி
பூக்களுக்கு புனர்ஜென்மம்
புல்வெளியால் புதுகிரகம்
பகலில் பளிச்சிடும் பால்நிலா
இரவில் இதயத்துக்கு மட்டும் மெல்லிசை
குயிஸ்கள் குளித்திருந்தன சிவப்பாய்
வேண்டுவோர்க்கு மட்டும் வெண்மழை
நடைபழகும் பட்டாம்புச்சி
உடையணிந்த பறவைகள்
சிறகுகள் கடன் கொடுக்கும் சிட்டுக்குருவி
என் தோட்டத்தில் இடம்பெயர்ந்த
நயாகரா....
குரோட்டன்ஸில் விண்மீன்கள்
சூழலுக்கேற்ப நிறம் மாறிய என் கண்கள்
சிரித்துக் கொண்டேயிருக்கும் மழலைகள்
வெதுவெதுப்பான வெள்ளைப்பனி
என் காலணிக்கு பக்கத்தில் இறக்கைகள்
நொடிக்கொரு முறை தோன்றும் வானவில்
என் பார்வைக்கு பதுங்கும் சூரியன்
ஏதேதொ மாற்றம் இயற்கையில்...
காதலின் கைகளில்.....
என்னருகே நீ இருக்கையில்....!
{kunena_discuss:779}