விடை சொல்வாயோ?? - சண்முகப் பிரியா
ஆகாயம் முழுதும் இருப்பது
நீல வானம் மட்டும் தான்...
நீண்ட நெடும் பயணம் முழுதும் என் மனதில் இருப்பது
நீ மட்டும் தான்..
சந்தோசம் என்றாலும் நீ தான்..
சந்தேகம் என்றாலும் நீ தான்..
சஞ்சலம் என்றாலும் நீ தான்...
என் சகலமும் நீ தான்...
இந்த அகிலமும் நீ தான்
வானும் நீ தான் மழையும் நீதான்..
ஆதவனும் நீ தான்..
அனலும் தான்..
நிலமும் நீ தான்..
என் நிழலும் நீ தான்..
ஒளியும் நீதான்..
ஒலியும் நீதான்..
என் களியும் நீதான்..
என் வளியுன் நீதான்..
என் வலியும் நீதான்..
அள்ள அள்ள குறையாத
அக்ஷய பாத்திரமும் நீ தான்..
மெல்ல மெல்ல
என் மனதில் நுழைந்ததும் நீ தான்
நீ மட்டும் தான்..
குட்ட குட்ட குனிவதும் நீ தான்..
பட்ட மரமும் நீ தான்..
பட்டென்று வெடிப்பதும் நீ தான்..
பலர் வளர்ச்சியும் நீ தான்
சிலர் வீழ்ச்சியும் நீ தான்..
உன்னை அறிந்தவர்
எல்லாம் அறிவார்..
உன்னில் கரைந்தவர்
வாழ்வின் எல்லை தெரிவார்..
மொத்ததில் நீ ஒரு விடை அறியாத கேள்விக்குறி !!!!!!!
விடை சொல்வாயோ இயற்கையே நீ யாரென்று ????