(Reading time: 2 - 3 minutes)

நில மகள் நோகலாமா? - சண்முகப் பிரியா

இயற்கை அன்னையே!

உன்னைக் காணும் போதெல்லாம் புதுப் பிறப்பெடுக்கிண்ட்றேன்

உன்னிடம் பேசும்போதெல்லாம் மனத்தெளிவடைகின்றேன்

உன்னை ரசிக்கும் போதெல்லாம் கவி பாடுகின்றேன்

நீ,

 கவிஞர்களுக்குத் தாயா?

இல்லை

 கவிதைகளுக்குத் தாயா?

 

உலகை  அறிந்தது உன்னாலே!

உயிர் வந்தது உன்னாலே!

 

புத்துணர்வு அடைவது உன்னாலே!

புது வாழ்வு கிடைத்தது உன்னாலே!

 

கவிஞனானது உன்னாலே-நல்ல

கலைஞனானது உன்னாலே

 

பல புதிர்களுக்கு விடை கிடைத்தது உன்னாலே

பந்த்ங்கள் கிடைத்தது உன்னாலே

 

நல்ல நண்பர்கள் கிடைத்தது உன்னாலே

மனிதம் அறிந்தது உன்னாலே

 

ஆனால் ..

உனக்கு கோபம் வந்தது யாரலே?

உன் கோபக்கனலை தாங்கமுடியவில்லை இந்த மனிதர்களாலே!!

 

என் அன்னையே!

பிறந்த மண்ணை நேசித்தேன்-என்

தாயினும் மேலாக

அது தந்த அன்பை நேசிக்கத் தவறினேனோ

பூமி பிளக்குது பூகம்பத்தாலே

மனிதர்கள்..

அன்பெனும் வார்த்தையை மறந்ததாலே

மதக் கலவரங்கள் வெடிக்குது தன்னாலே

இந்த மனிதர்களின் வெறி அடங்கும் நேரம் எப்போது வருமோ?

அதற்க்குள்

நீ உன்  சீற்றத்தை தணித்துக்கொள்

புது மனிதர்கள் பிறக்கட்டும் உன்னாலே

அவர்களால் பூமி சி¡¢க்கட்டும் தன்னாலே

 

வானம் மழையை பொழியாவிட்டாலும்

உழவர்களின் கண்ணீர் பொழிந்திடும்

காற்று தென்றலாய் வீசாவிட்டாலும்

குண்டுகள் பூமியில் வீசப்படும்

சூ¡¢யன் ஒளியை தராவிட்டாலும்

பூமி பிளந்து ஒலியைத் தரும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.