(Reading time: 1 - 2 minutes)

நில மகள் நோகலாமா? - சண்முகப் பிரியா

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்

உன் நேசப் பார்வைக்காக

ஏங்கி நிற்கும் பயிராக  வாடுகின்றேன் நான்!

 

நின் திருமுகம் கண்ட நாள் முதலாய்

ஆளில்லா கானகத்தில்

கண்ணைக் கட்டிவிடப் பட்டதுபோல் உணருகின்றேன் நான்!

 

என் கண்ணிற்க்கு

ஒளி வருவது எப்போது?

என் மனம்

ஊஞ்சலாடுவதை நிறுத்துவது எப்போது?

என் மனமறியாது

என்னைச்சூழ்ந்துள்ள வெறுப்பு மறைவது எப்போது?

என் மனம்மாறி

நான் உன்னை மறப்பது எப்போது?

என் மனதிலுள்ள உன்னை இவ்வுலகம்

அறிவதை நிறுத்துவது எப்போது?

என் காதல் கசிந்துருகாமல்

என் மனதை தடுத்து நிறுத்துவது எப்போது?

 

இவை எல்லாவற்றிற்க்கும்

வழி கிடைப்பது எப்போது?

அதுவரை குத்துயிரும் குலையுயிருமாயிருக்கும் என் மனதை

நீ அறியாமல் நான் தடுக்க வேண்டும் இப்போது!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.