காத்திருந்தேன் காற்றினிலே!!
கார்கால இருளில்
கருமேக நிழலில்
கடல் அன்னையின் மடியில்
கால் ததும்பும் நுரைகளில்
காத்திருந்தேன் காற்றினில்
கரைந்திருந்தேன் அவள் நினைவினில்!!
மழைக்கால மாலையில்
ஒரு மலரை போல் வந்தாள் அவள்!!
மதி மயங்கி நின்றேன் அவளின்
மயக்கும் புன்னகையில் !!
முழு மதியின் ஒளி கண்டு
மாயமாய் மறைந்தாள் அவள் !!
மாயை என்று உணர்ந்தேன் !!
காத்திருந்தேன் காற்றினில்
கரைந்திருந்தேன் அவள் நினைவினில்!!
இலையுதிர் கால இரவில்
இலையில்லா மரத்தின் கீழ் நின்றேன்!
துணையில்லா வழியில் சென்றேன்!!
எல்லையில்லா அன்புடன்!!
காத்திருந்தேன் காற்றினில்
கரைந்திருந்தேன் அவள் நினைவினில்!!
வசந்த கால வானில்
வானவில்லாய் வந்தாள்!!
கானல் நீராய் மறைவாள்
என்று கண்மூடி நின்றேன்!!
கானக் குயிலோசை போல்
குரல் எழுப்பினாள்.
அவள் கன்னச் சிவப்பை
கொண்டு அறிந்தேன்
வானவில் இல்லை !!
என் வாழ்வின் வசந்தமென்று !!
கை கோர்த்து நடந்தேன்
அவளுடன் காற்றினில்!!
வென்று விட்டேன்
அவளின் நினைவுகளை !!