என் வினோதமானவனே - சரண்யா நடராஜன்
என்னவனே..!
என் இனியவனே..!
என் வினோதமானவனே..!
என் அனுமதியில்லாமல் என்னுள் நுழைந்தவனே..!
என் சுவாசத்தில் கலந்தவனே..!
என் உயிர் மூச்சாய் இருப்பவனே..!
உன்னை காணவே என் கண்கள் தவமிருக்கின்றன..!
உன்னை காணவே என் கால்களும் பயணிக்கின்றன..!
உன் நினைவிலேயே என் இதயமும் துடிக்கின்றன..!
என்றென்றும் உன்னை தொடர்வேன்
உன் நிழலுக்கும் கூட தெரியாமலே....!
கண்களை மூடினால் கனவிலும் நீயே..!
என் நினைவிலும் நீயே..!
என் இனியவனும் நீயே..!
என்னை இம்சை செய்பவனும் நீயே..!
என் ஒவ்வொரு அனுவிலும் நீயே..!
என்னை அனு அனுவாய் கொல்பவனும் நீயே..!
என்னை இரட்சிப்பவனும் நீயே..!
என்னால் ரசிக்க படுபவனும் நீயே..!
என் எல்லாமுமாக இருப்பவனும் நீயே..!
என்னை மகிழ்விப்பவனும் நீயே..!
என்னை அழ வைப்பவனும் நீயே..!
என்னை வருத்துவதில் உனக்கு அவ்வளவு ஆனந்தமா...?
எவ்வளவு வருடங்கள் ஆனாலும்
காத்திருக்கிறேன் உனக்காக..!
வருவாயா என்னை கரம் பிடிக்க........!
- என்றென்றும் உன்னை தொடரும் உன் ப்ரியமானவள்
{kunena_discuss:779}