காதல் மழையில் - சரண்யா நடராஜன்
உன் கண்களுக்குள் என் கண்களை கலந்து
மௌனமாய் உன்னுடன்
காதல் மொழி பேச ஆசை தான்..
உன் விரலோடு என் விரல் பிடித்து
உன் தோள் சாய்ந்து நடக்க ஆசை தான்..
காற்றில் கலையும் உன் கேசத்தை
என் கை கொண்டு சரி செய்ய ஆசை தான்..
கொட்டும் மழையில் இருவரும் ஒரே குடையில்
நடந்து செல்ல ஆசை தான்..
குடையை தட்டி விட்டு நானும் மழையில் நனைந்து
உன்னையும் நனைய வைக்க ஆசை தான்..
கோபத்தில் உன் முகம் சிவப்பதை ரசிக்கவும்
ஆசை தான்..
உன் செல்ல திட்டல்களை கேட்கவும்
ஆசை தான்..
சிறிது நேரத்திலே நீ சிரிப்பதை பார்க்கவும்
ஆசை தான்..
உன் பெயரை ஒரு நாளில் ஓராயிரம் முறை
சொல்லவும் ஆசை தான்..
நெடு தூரம் பயணம் செய்யவும் ஆசை தான்
உன்னுடன் என்றால்..
யாருமே இல்லாத ஊரில் இருக்கவும் ஆசை தான்
நீ அருகில் இருந்தால்..
உன்னுடன் செல்ல சண்டைகள் போடவும் ஆசை தான்..
உன் சமாதான கெஞ்சல்களை ரசிக்கவும் ஆசை தான்..
நீ தூங்கும் பொழுது உன்னை ரசிக்கவும் ஆசை தான்..
நீ விழிக்கும் பொழுது தூங்குவது போல் பாசாங்கு செய்து
உன்னிடம் மாட்டிக்கொள்ளவும் ஆசை தான்..
கண நேரமும் உன்னை பிரியா வரம்
கேட்கவும் ஆசை தான்..
அப்படியே பிரிந்தாலும் உன் நினைவுகளிலே
வாழ ஆசை தான்..
என்னவனே..
எப்பொழுது பார்ப்பேன் உன்னை..
என் ஆசைகளை எல்லாம் உன்னிடம் சொல்லவும் ஆசை தான்.....
உன் காதல் மழையில் நனையவும் ஆசை தான்....
{kunena_discuss:779}