நிலவவளின் காதல் - சந்தியா
ஆயிரம் ஆண்கள் விண்மீனாய்
என்னை சுற்றி வலம்
வந்தாலும்....
அசையாமல் நின்ற
என் மனதை....
உன் ஒற்றை பார்வை
அடிவரை பாய்ந்து
கரைத்துவிட்டது....
கல்லாய் போன
என் மனதை பகலில்....
ஆதவனே அதை நீ
அறிவாயோ....
உன் பார்வையை சந்திக்க முடியாமல் தான்
இரவையே இரவலாக
கேட்டேன் இயற்கையிடம்....!
{kunena_discuss:779}