என் கண்ணா... - சந்தியா
உன் கண்ணகுழி சிரிப்பில்
சிக்கிக்கொண்டு மீளமுடியில்லை
இன்னும் என்னால்……
நீயோ உன் கடைக்கண்
பார்வையை மறந்தும் கூட
வீசிவிட மறுக்கின்றாயே……
உன்னருகில் கோதையாக
இல்லையேன்றாலும்
கோபியர்களில் ஒருவளாக
என்னை ஏற்கமாட்டாயா என்று....
ஏங்கியே தவிக்கின்றேனே
என் கண்ணா .....
{kunena_discuss:779}