பேதையின் மனம் - சந்தியா
கண்ணா உன்மேல் நான் கொண்ட கோபத்தை மறந்து நீ வரும்
வேளையில் மயங்கிவிடுகின்றதடா
இந்த பேதையின் மனம்....!
உன் வேணுகானத்தின் ஓசையிலே
கண்டுபிடித்து விடுகின்றேனே
உன் காதலின் யாசிப்பை....!
கள்வன் தானடா நீ
காதல் கொண்ட மனதில்
முதலில் காயப்படுத்தி பின்பு
காதல்ரசம் சொட்ட சொட்ட
உன் கானத்தில் யாசிப்பாயா???
என்று கோபம் கொள்ள கூட
முடிய வில்லையே.....
என் செய்வேன் நான்
உன் செய்கையில்
என் வசம் இழக்கிறேனே...
இல்லை இல்லை இழந்துக்கொண்டிருக்கிறேன்.....!
{kunena_discuss:779}