பரிமாணங்கள் (காதல் சொல்ல வந்தேன்) - மாது
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
மனம் ஆட்கொண்டது
காதலாம், காதலாம்
உன் பேச்சே மூச்சு
உனது மூச்சு நின்றதால்
முடித்தேன் என்வாழ்வை
காதலாம், காதலாம்
நீயின்றி நானில்லை – உனது
நினைவின்றி வேறதுமில்லை
வாழ்வும். சாவும் உன்னோடே
காதலாம், காதலாம்
கண்டதே காட்சி
கொண்டதே கோலம்- என
ஜாதி மதம் தகர்த்தோம்
காதலாம், காதலாம்
பெற்றொர், உற்றாரென
பலரும் வசைபடினாலும்
வாசல் தாண்டினோம்
காதலாம், காதலாம்
பருவத்தின் இயல்பாலும்
பாலினத்தின் ஈர்பாலும்
தப்பை தெரிந்து செய்தோம்
காதலாம், காதலாம்
பேஸ்புக் அறிமுகம்,
வாட்சாபில் பரிமாற்றம்
இணையத்தால் இணைத்தனர்
காதலாம், காதலாம்
விட்டுகொடுக்க மனமின்றி
நீயா, நானா போக்கால்
விடைபெற்று பிரிந்தனர்
காதலாம், காதலாம்
காதலால் காமமா, அல்லது
காமத்தால் காதலா என்றறிய
பட்டிமண்டப நிலை கொண்டதோ
காதலாம், காதலாம்
{kunena_discuss:779}