வெந்நிற காக்கை கருநிற மனிதர்கள் - சங்கீதா கல்யாணசுந்தரம்
வெளியே கருநிறம் என்றாலும் மனமோ வெள்ளை
தன் கூடாக இருந்தலும் பிறஉயிர்க்கும் பிறப்பிடம் தரும்
தன் குஞ்சு இறந்தலும் பிறஉயிர் பெற உதவுகிறது
இதனால் தன் சனிபகவனே வாகனமாக்கிக் கொண்டாரோ!
எதயும் எதிர்பாராமல் கிடைப்படை உண்டு வாழ்கிறது
எந்த கவலையுமின்றி சுதந்திரமாய் தி¡¢கிறது
ஆனால் எல்லாமுடைய இந்த வேடிக்கை மனிதனோ
பிற உயிரை துன்புறுத்தி வாழ்கிறான்
பிறர் வாழ்வை திருடி வாழ்கிறான்
எவ்வாறு வெளியே வெந்நிறம் உடுத்தினாலும்
அவன் உள்மனமோ கருந்நிறமாகிறது,
தன்னுள் இருக்கும் இன்பத்தை தொலைத்துவிட்டு
பிறபொருள் மீது ஆசை கொள்கிறான்,
இருதியில் ஆசைப்பேயாக மாறிவிடுகிறான்.
சிந்தியுங்கள் மனிதர்களே!சிந்தியுங்கள்
ஐந்தறிவு உடைய காகையின் இனிமையும்
ஆறறிவு உடைய மனிதனின் நிலைக்குலைவையும்
விழித்திடுங்கள் மானிடரே,
வாழ்க்கையை வாழுங்கள்,
வாழு, வாழவிடு என்பதை உணருங்கள்!
{kunena_discuss:779}