12. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
அது மயிலோ, மங்கையோ
மழையோடு சேர்ந்தாடுவது?
மயில் தோகையோ, கருங்கூந்தலோ
தென்றலோடு வீசுவது?
அது மலரோ, மண்வாசமோ
மங்கையை மயக்குவது?
சிறு சாரலோ, பெருந்தூறலோ
பெண்ணை நனைப்பது?
அது மின்னலோ, நங்கையின்
கண்கலோ ஒளி வீசுவது?
அவள் பார்வையோ, என் தேவையோ
என்னை அவள் வசம் ஈர்ப்பது?
இதுதான் காதலோ, கவியாகி
நான் கன்னியை வர்னித்திட/இரசித்திட???
{kunena_discuss:779}