பிறைசூடன்மேல் பித்து - ஷிவானி
பெரியவனோ, பெருந்தவத்தவனோ!
முதலவனோ, மூப்பை மறந்தவனோ!
தீ அவனோ, கங்கை கொண்டு அதை அனைத்தவனோ!
சிகை அழகனோ, திரிசடையில் திங்களை சுமந்தவனோ!
மங்களனோ, மங்கையை மயக்கி உடலில் சேர்த்தவனோ!
மாசில்லா மன்னவனோ, உடலெங்கும் பொடி பூசியவனோ!
எவன் அவனோ, சிவனை முழுவதுமாய் அறிந்தவனோ???
{kunena_discuss:779}