20. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
இருள் சூழ்ந்த கருங்காட்டில் வீசும் - மல்லிகை மணம்
புருவமென்னும் கருநிற தேய்பிறை நடுவின் - வட்ட பொட்டு
காவிய புலவர்களையும் ஊமையாக்கும் - கருங்குவளை கண்கள்
மோகத்தில் மூழ்கடிக்கும் மூக்கின்மேல் மின்னிய - வைர மூக்குத்தி
பொன்னிற தாமரை இதழாலான கன்னத்தில் - எட்டிப்பார்க்கும் பரு
இருவரி இலக்கணமாய் நின்றிருந்த உதட்டின் - சிகப்பு சாயம்
மிதந்திடாத மேகமாய் அசைந்திருந்த கழுத்தின் - ஒற்றை சரம்
நிலத்திலும், மலைமேடுகளிலும் தவழ்ந்தோடும் நதியானது - என் கற்பனை
செங்கரும்பாய் சிவந்திருந்த கைகளிலாடிய - வளையோசை
பருவமடைந்த மூங்கில்களாய் வளர்ந்திருந்த கால்களின் - கொலுசோசை
மண்ணில் சரிந்த மலர்கள் பதித்த சித்திரமாய் - உன் பாததடம்
என எல்லாம் என்னை மயக்க,
உன்னை எப்படி பிரிவேனடி பெண்ணே?
இக்காதல் என்னை வதைக்க…..
{kunena_discuss:779}