21. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
எதிர்காலம் ஏதென்று அறியும்முன் பிறந்தது
நிகழ்காலம் நிலைக்குமா என்பதை மறந்தது
காலங்கள் கடந்த பின்னும் வாழ்கிறது!!!
காவியங்களில் கலையாது ஜீவனாய் நின்றது
பாதைகள் பல இருந்தும் நல்வழி நழுவாதது
பாவியையும் பண்பானவனாய் மாற்றியது!!!
வாழ்க்கையை வரமாய் காணச்செய்தது
எதிரியையும் மன்னிக்க மணம் தந்தது
பக்குவத்தை முழுவதுமாய் என்னுள் பாய்ச்சியது!!!
அப்பெரும் சக்தி கொண்டகாதலை
எப்பலனும் பாராது எனக்கேண் தந்தாய் அன்பே???
{kunena_discuss:779}