(Reading time: 2 - 3 minutes)

தேடுகின்றேன் தேடுகின்றேன் - கல்பனா

Mom

தேடுகின்றேன் தேடுகின்றேன்

எங்கே போனது

யாரிடம் சென்றது

தோட்டத்தில் மலர்ந்துள்ள

பனியில் நனைந்த பூக்களைப் பார்க்கிறேன்.

இங்கேயும் நின்றிருக்கவில்லை.

காலை கதிரவனின்

பொன் நிறக்கதிர்களை பார்திருக்குமோ?

இங்கேயும் இல்லை.

தனக்கென்று பாதை இல்லாதிருந்தும்

சீராக அணிவகுத்துச் செல்லும்

வானவெளி பறவை கூட்டத்திடமா ?

இங்கும் இல்லையே.

அமைதியாய் கண்ணுறங்கும் என்

ஆசை கணவரிடமா

ம்ஹும்...... இல்லை

தூக்கத்தில் கூட கொஞ்ச தூண்டும் என்

சுட்டிக் குழந்தைகளுடனா ?

இங்கும் இல்லாது...

எங்கே சென்றது?

தூரத்தில் கேட்கும்

ஆற்றின் சலசலப்பு

மனதில் ஒரு நெருடல்

கால்களோடு கண்களும்

அங்கே வேகமாய் விரைய

குட்டிமா, போதும் வாம்மா

அம்மாவின் குரலுக்கு செவி கொடாமல்

மெல்லிய கொலுசணிந்த

சிரு பாதங்கள் நீரில் ஆடியபடி

தன் தாயுடன் விளையாடும்

குட்டி பெண் அருகே.......

ஏக்கமாய் பார்த்தபடி

அங்கே தான் நின்றிருந்தது

அது....... என் மனது

அம்மா அம்மா என்ற குரலுடன்

காலா காலத்துல எல்லோருக்கும் நடக்குது

இவளுக்கு மட்டும் ஏனோ இப்படி என்று

இருபத்தி ஒன்பதில் மணவாழ்க்கை புகுந்த பின்னும்

சகோதரிகளை காட்டிலும் அதிகமாய் உன்னோடு

திகட்ட திகட்ட வாழ்ந்திருந்தாலும்

ஏக்கம் குறையாத என் மனது

சத்தமாய் உரைத்தது

"அம்மா, எனக்கு கூட வயசாகட்டும்

உனக்கு மட்டும் வயசாகாம

என்னோட ஓடி விளையடின அம்மாவா

என் கூடவே இருந்திடும்மா"

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.