உலகிற்கு நீ யார் என்று காட்டிடு - கார்த்திகேயன் பிச்சை
பயந்து பயந்து ,தாழ்ந்து தாழ்ந்து ,
அடுத்தவரை பார்த்து, வியந்து வியந்து வாழ்ந்த வாழ்க்கை போதுண்டா நண்பா ,
விழித்திடு , எழுந்திடு , நெஞ்சை உயர்த்திடு
உன்னை கை கொட்டி சிரித்தவர்களை எல்லாம்
உன்னை கை தட்டி வரவேற்க செய் ,
உன்னை உதவாக்கரை என்றவர்களை எல்லாம்
உன்னிடம் உதவிக்கரம் நீட்டச் செய் ,
பட்ட அவமானங்கள் போதுண்டா நண்பா
நம்மை அவமானப்படுத்த எவனுக்கும் உரிமை இல்லை,ஏன்
அந்த கடவுளுக்கும் கூடத்தான்,
நாம் ஒன்றும் சூரியனல்ல விடியலுக்காக காத்திருக்க
சுழன்று கொண்டே இருக்கும் பூமி ,
ஏன் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்
வாய்ப்பு கிடைக்கா விட்டால் உண்டாக்கு வாய்ப்பை,
உலகிற்கு நீ யார் என்று காட்டிடு
உலகம் உன்னால் பெருமை படட்டும் .
{kunena_discuss:779}