(Reading time: 1 - 2 minutes)

உலகிற்கு நீ யார் என்று காட்டிடு - கார்த்திகேயன் பிச்சை

success

பயந்து பயந்து ,தாழ்ந்து தாழ்ந்து ,
அடுத்தவரை பார்த்து, வியந்து வியந்து வாழ்ந்த வாழ்க்கை போதுண்டா நண்பா ,

விழித்திடு , எழுந்திடு , நெஞ்சை உயர்த்திடு 
உன்னை கை கொட்டி சிரித்தவர்களை எல்லாம் 
உன்னை கை தட்டி வரவேற்க செய் ,

உன்னை உதவாக்கரை என்றவர்களை எல்லாம்
உன்னிடம் உதவிக்கரம் நீட்டச் செய் ,

பட்ட அவமானங்கள் போதுண்டா நண்பா 
நம்மை அவமானப்படுத்த எவனுக்கும் உரிமை இல்லை,ஏன் 
அந்த கடவுளுக்கும் கூடத்தான்,

நாம் ஒன்றும் சூரியனல்ல விடியலுக்காக காத்திருக்க 
சுழன்று கொண்டே இருக்கும் பூமி ,

ஏன் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் 
வாய்ப்பு கிடைக்கா விட்டால் உண்டாக்கு வாய்ப்பை,

உலகிற்கு நீ யார் என்று காட்டிடு 
உலகம் உன்னால் பெருமை படட்டும் .

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.