தாய்மை - முஹம்மது காசிம்
தாயே
உன்
கஷ்டத்திற்தக்கும்
முன்
என்
பிறந்த நாளை
கொண்டாட
நான் தகுதியில்லை !
தத்தி தத்தி தவழ்ந்த
போது
உன்னுடைய
கவனம்
தவறியத்தில்லை !
அடி மீது அடி வைக்கும்
போது
தடுமாறி விழும் போது
உன் தாலாட்டுகள்
ஒய்ந்ததில்லை !
நான்
உண்ண மாறுத்த
போது
உண் கைகளில் இருந்த
உணவு
வீணாகி பார்த்தில்லை !
துன்பம்
உன்னை
துவண்ட போது கூட
துணி
துவைக்காமால்
இருந்ததில்லை !
நீ
பசியோடு
இருக்கயிலே
உன்
பல பிள்ளை இருந்தாலும்
ஒரு பிள்ளைக்கும்
பாகுபாடு
பார்த்ததில்லை !
இந்த
உலகத்தில்
இறக்கத்திற்க்கு
பெயர் சொல்ல
உன்
பெயரை தவிர
எனக்கு உச்சரிக்க
வார்த்தையில்லை !
நான்
தேர்வு எழுத
படிந்த இருந்த காலமெல்லாம்
நீ எழுதுவது போல்
இரவாய்
இருந்த போது
நீ தூங்கியதை
நான்
காணவில்லை !
என்னுடைய
கோபம்
உன்னை தாக்கும் போது கூட
நீ எனக்கு
கடமை செய்ய
குறை
வைத்ததில்லை !
என் கண்களில்
நீர்
வடிந்தால்
உன் முந்தனைகள்
ஒய்வதில்லை !
என்
பருவ காலம் கடந்தாலும்
உன்
பணிகள்
ஒய்வதில்லை
தாயை உணராதவனுக்கு
இது
தெரிவதில்லை !
தெய்வத்தை கூட
கல்லில் தான்
பார்க்கிறார்கள்
ஆனால்
உன் பாதத்தில்
சுவர்க்கம் இருக்கிறதை
தவிர
வேறு சுகத்தை
நான்
காணவிரும்பவில்லை !
உன்னை போல்
பல தாயை
முதியோர் இல்லத்தில்
விடுபவர்களை
கேட்கயிலே
என்னவொன்று
சொல்வது என்று
எனக்கு
தெரியவில்லை !
உன்னுடைய தியாகத்தை
நினைக்கும்
நேரமெல்லாம்
என் கண்ணீர்
ஒய்வதில்லை !
கடந்த காலத்தை
நினைக்கயிலே
மறு
ஜென்மாயி பிறக்க
நான் விரும்ப வில்லை
உனக்கு
முதல் ஜென்மாயி
இருந்து
சேவை செய்ய
ஆவலோடு
இருக்குகின்றேன் !
{kunena_discuss:779}