அன்பே - முஹம்மது அபூதாஹிர்
அன்பே மலர் சூடி நீ வருவது
அழகுதான் !
மலர்ந்த முகத்துடன் வா
அது மிகுந்த அழகு !
நெத்திச் சூடியை விட
நிரந்தர அழகு
புத்தியால் சூடு
அணிந்துக் கொள்
காதில் தோடு !
அதை விட அழகு,
நல்ல விசயங்களுக்கு
உன் காதைக் கொடு !
எதுக்குப் பவுடர் ?
முகத்துக்கு அழகு
புன்னகையால் பூசு!
ஒதுக்கு லிப்டிக்கை ,
உதட்டுக்கு அழகு
பிறர் மனம் புண்படாமல் பேசு !
மூக்குத்தியெல்லாம்
எனக்குப் பிடிக்காது !
மற்றவரைக் குத்திப் பேசாதே
அது போதும் !
நீ கொலுசு அணிந்து வருவது
அழகுதான் !
பணிவாய் பூமியில் நடந்தது வா
அது அதை விட மிகுந்த அழகு !
அன்பே
ஆபரணங்கள் நாளாக சேதாரமாகும் !
அழகிய குணங்களால்
உன்னை அலங்கரித்துக் கொள் !
அதுவே அழியாத ஆதாரமாகும் !
{kunena_discuss:779}