ஏற்பாயா அன்பே? - சிவரஞ்சனி
என் இதயத்தினை இரும்பு போல் வைத்தருந்தேன்,
காந்தம் போல் அதனைக் கவர்ந்திழுத்தாய்!
மனதினை மண் போல் வைத்திருந்தேன்,
அள்ளிச் சென்று மாளிகை கட்டிவிட்டாய்!
கனவினைக் கல் போல் வைத்திருந்தேன்,
செதுக்கி சிற்பம் வடித்துவிட்டாய்!
கற்பனையை வெற்றுத்தாளாய் வைத்திருந்தேன்,
அதில் வண்ணச் சித்திரம் வரைந்துவிட்டாய்!
என் அகராதியில் வெறும் வார்த்தையாக இருந்த காதலுக்கு அர்த்தம் சேர்த்தாய்!
உன்னால் புதிதாகப் பிறந்தேன்,
நீ என்னை மறந்தாலோ,மறுத்தாலோ
மரித்து விடுவேன் மனதளவில்!
அன்பின் அகராதியே,
என் அன்பின் ஆழம் உணர்வாயா?
ஏற்பாயா என்னை?
{kunena_discuss:779}