ஒரு துளி கண்ணீர் சிந்த - வின்னி
என் ஒவ்வொரு சொல்லிலும், ஏன் நான் தடுமாறுகிறேன்?
எல்லாவற்றையும் சொல்வதற்கு, ஏன் நான் பயப்படுகிறேன்?
என் ஒவ்வொரு செய்கையையும், ஏன் நான் மறைக்க முயற்சிக்கிறேன்,?
நான் எங்கு போகிறேன், எங்கு வருகிறேன்?
எவ்வளவு தூரம் சென்று விட்டேன்?
இப்போது என் நிலை என்ன?
எனக்குள் மறைந்திருக்கும், இருட்டான அச்சத்தை,
அதனால் பல ஆண்டுகளாக எனக்குள் நடக்கும்,
மனப் போராட்டங்களை எப்படிச் சொல்வேன்?
என் இதயத்தில் நடக்கும் அந்த மகா யுத்தத்தை,
உன்னிடம் கூறினால், உன்னால் உதவ முடியுமா?
உன்னால் முடியுமா, என்னை அந்த குழப்பமான நிலையிலிருந்து விடுவிக்க?
உன்னை என் நண்பனாக நினைத்து என் மனதிலிருப்பதை உன்னிடம் சொன்னால், என் போராட்டங்களுக்கு ஒரு முடிவு வந்து விடுமா?
காதலால் நான் படும் அவஸ்தையைத் தீர்க்க உன்னால் முடியுமா?
இப்போது நான் அடக்கி வைத்திருக்கும்,
கண்ணீரில், ஒரு துளி சிந்த உதவுவாயா?
மனதைத் திறந்து எல்லாவற்றையும்,
தெள்ள தெளிவாக, உன்னிடம் கூற,
இதுதான் தருணம் என்று,
நான் முடிவெடுத்து விட்டேன் என் தந்தையே!
{kunena_discuss:779}