என்னுடன் பழகிய ஆன்மா - வின்னி
நீ இன்னும் என் அருகில் இருப்பதை உணர்கிறேன்.
நீ எனது ஆருயிர் நண்பன்,
நீ எனது செல்லப் பிராணி,
நீ எனது மறைந்தும் மறையாத நாய்,
நீ எப்போதும் என் இதயத்துள்,
பிரகாசித்துக் கொண்டு இருப்பாய்.
உன்னிடம் நான் படித்தது,
ஒருவரும் அறியாத,
தார்மீக மதிப்புகள், நெறிமுறைகள்.
நீ எனக்குக் கற்றுத் தந்தது,
எப்படி ஒருவரை ஒருவர் விரும்புவது,
எப்படி நன்றியாக இருப்பது,
எப்படி துணிவுடன் செயல்படுவது,
எப்படி முழு ஈடுபாட்டுடன் உழைப்பது,
எப்படி பக்தியுடன் இருப்பது.
எப்படி அவற்றை அறிவது, ஒரு எல்லை இல்லாமல்.
எப்படி அவற்றை வைத்திருப்பது, ஒரு நிபந்தனை இல்லாமல்.
நான், இப்போது இருப்பது போல்,
ஒரு மனிதனாக இருக்க முடியாது,
உனது ஆன்மா என்னை, ஆசீர்வதிக்கா விட்டால்!
{kunena_discuss:779}