பயனற்ற சிந்தனைகள் - வின்னி
அன்று பகல் வெளிச்சம் இல்லை,
எங்கு சென்றது அந்த சூரியன்?
அந்த நிலா வெளிச்சத்தைக் காணவில்லை .
எங்கு மறைந்தது அந்த நிலா?
காற்றும் இல்லை அந்த பௌர்ணமி தினம்.
முகில்கள் மறைத்தன சந்திரனை அன்றிரவு.
நான் தனிமையை விரும்புகிறேன்!
நண்பர்கள் வேண்டாம், உறவினர் வேண்டாம் ,
தொலைபேசியும் வேண்டாம் .
அந்த அமைதியான தனிமையில்
நான் சிந்திக்க வேணும்!
பயனற்ற சிந்தனைகள்,
மதுவை நாடுகிறது !
நான் இப்போது என்ன செயவது?
என் நிலையை அறிந்திருப்பாய் நீ என்று,
எப்போதும் நான் எண்ணி இருந்தேன்.
மன்னிப்பாயா என்னை? , என்று நான்
கேட்பதும், மதுவை அருந்துவதும்,
ஒரு மாற்றத்தையும் இப்பொது செய்யாது!
மதுவால் அவளை மறக்க முடியும், ஆனால்
மீண்டும் அவளை அழைத்துவர முடியுமா?
என்னை விட்டுப் போக நீ ஒரு
காரணமும் சொல்லவில்லை.
அதை நீ எழுதி வைக்கவும் இல்லை.
என்னைக் கை விட்டுவிட்ட உன்னை
நான் குறை சொல்ல முடியாது.
நான் காதலில் தவறி விட்டேன்.
எனக்குக் காதலைப் பற்றித் தெரியாது!
{kunena_discuss:779}