விழிவழியே... - -த.ராமிஷா
விழி நீரின்
துணை கொண்டு
விழியற்ற ஓர் உயிர்
புனையும் காவியம் இது….
விந்தையான இவ்வுலகில்
வித்தைகள் பல புரியும்
விபரீத வயதில் - என்
விழியிரண்டை
விபத்தொன்றில் இழந்தேன்…
அதிவேகம் ஆபத்து என்ற
அன்பின் மொழியை
ஏற்க மறுத்தேன்!
அச்சத்தை துச்சம் எனக்கொண்டு
துள்ளி திரிந்தேன்…
இரு-சக்கர வாகனத்தை
சிறகுகளாகக் கொண்டு
தேவருலகத்தை சேர்ந்தவன் போல்
சாலைகளில் பறந்தேன்…
ஆனால்---
விழியிழந்த பின் தான்
எமனின் வாகனமாம்
வேகத்தையும் உடன்
அழைத்துச் சென்றதை
உணர்கின்றேன்…
கண்கெட்ட பின்னே காணும்
சூரிய உதயம் போன்று
இந்நொடியில்
உணர்ந்தும் பயனெ;னவோ???
கன்னங்களின் சூடு
கண்ணீரின் சுவடதை
நினைவுறுத்திட - நான்
இறைவனிடம் யாசிக்கின்றேன்---
விழிகள் -
எனக்கு கிடைத்திடவும்
விடியாத உணர்வு
எவருக்கும் நேராதிருக்கவும்!!!
(கண் தானத்தால் ஒளி பெற்ற பின்…)
பார்வை ஓர் வரம்
என உணர்கின்றேன்…
உயிரால்
நான் மறைந்தாலும்
விழியால்
இவ்வுலகினில் வாழ்ந்திட--
அளிக்கின்றேன்
என் கண்களை
தானமாய் அல்ல
ஆத்மார்த்தமாய்!!!
{kunena_discuss:779}