சிறாரின் பா.... - சரளாதேவி
மெல்லிய மலர்
காமக்கண்ணில் சிலர்
சம்மட்டியால் அடித்திட
இதழ்கள் சிதைந்திட்ட நிலையில்
தினம் தினம் எத்தனை மலர்கள்
சிதைக்கப்படுகின்றன
பிஞ்சிலே அறுக்கப்படுகின்றன
விதியென்று
மனதைத்தேற்றி கொண்டவர் எத்தனை பேர் நம்மில்
விதியில்லை இது.. மதியற்ற மனிதனின்
சதி….
மலர்ந்து மணம்வீச கூட
வழியில்லை
விழிப்புணர்வுகொண்டு வேலிபோட்டிடுவோம்
இனி இத்தோட்டம்
வசந்த காலம் காண…
{kunena_discuss:779}