மரணத்திலும் பெருமை...!! - டோனா
கண்கள் கலங்கினதா தோழா??
சாவின் விளிம்பில் நிற்கையில்..
வாழும் ஆசை
பிறக்கவில்லையோ..??
வலியில் துடிக்கையிலே...
எதை நினைத்தாய்..??
கண்களை மூடுகையிலே...
பாசமிகு அம்மாவின்
அக்கறையையா...??
கண்டிப்பான அப்பாவின்
அரவணைப்பையா..??
பள்ளியில் செய்த
சேட்டைகளையா..??
கல்லூரியில் துள்ளி
திரிந்ததையா..??
நாட்டிற்காய் உழைக்க கிடைத்த
வாய்ப்பையா..??
அதற்காய் வீட்டைப் பிரிந்து
சென்றதையா..??
எதை நினைத்தாய்..??
ஆண்மையின் சிகரமாய்
இருந்ததையா..??
பெண்களின் கனவாய்
திகழ்ந்ததையா..??
அழகாய் மலர்ந்த காதல்
மொட்டையா..??
காதலையே கரம்பிடித்த
தருணத்தையா..??
உற்றார் உறவினர்களின்
வாழ்த்தையா..??
மாங்கல்யம் அணிவிக்கையில்
சிலிர்த்ததையா..??
எதை நினைத்தாய்..??
காதலில் இருவரும்
கசிந்துருகியதையா..??
பிரசவ வலியில் மனைவி
துடிக்கையில் நீயும்
துடித்ததையா..??
முதல்முறை குழந்தையைக்
கையில் ஏந்திய
தருணத்தையா..??
அவள் பிஞ்சு விரல்களால்
முகத்தில்
அடி வாங்கியதையா..??
அவள் தன் வாய்
அமுதத்தினால் உன்
கன்னக்குழியை
நிரப்பியதையா..??
நீ முத்தமிட்டுக் கிளம்புகையில்
"மீசைக் குத்துதப்பா" என
அவள் சிணுங்கியதையா..??
யோசித்துப் பார்த்தேன்...
புரியவே இல்லை...
பின்
உயிரற்ற உன் முகத்தில்
உறைந்த உன் புன்னகையில்
கண்டேன்,,
எதை நினைத்தாய் என்று..
நாட்டுக்காக சாகையில்
ஏதடா எனக்கு வீட்டு நினைப்பு
என்று கேட்டது உன் முகம்..
புரிந்துவிட்டது...
நம் நாட்டுக்காக
நீ செய்யும்
தியாகமும்,,
உன் கனவு நிறைவேறிய
பெருமிதம் மட்டுமே
நினைவில் இருந்திருக்கும்...
துக்கத்திலும் பெருமைக்
கொள்கிறோம்,,
தோழா உன் மறைவில்...
வீரனே
எங்களைக் காக்க நீ
மறைந்ததால்
அனைவருக்கும் தோழன்
தான் நீ...
{kunena_discuss:779}