நான் எப்போது பெண் ஆனேன் - அம்மு ஜெயலக்ஷ்மி
நான் எப்போது பெண் ஆனேன்?
என் கண்களுக்கு மையிட்டுக் கொண்டேனே, அப்போதா?
என் இதழ்களில் வண்ணம் தீட்டினேனே, அப்போதா?
என் செவிகளில் கம்மல் அணிந்தேனே, அப்போதா?
என் கைகளில் வளையல் அணிந்தேனே, அப்போதா?
என் கூந்தலில் பூக்களை சூடினேனே, அப்போதா?
என் தேகத்தை சேலையால் மூடினேனே, அப்போதா?
என் நெற்றியில் குங்குமம் இட்டு கொண்டேனே, அப்போதா?
எப்போது நான் பெண் ஆனேன்?
உன்னை நேரில் பார்த்தேனே, அப்போதா?
என் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டாயே, அப்போதா?
உன்னை முழுவதுமாக என்னவனாய் பெற்றேனே, அப்போதா?
நீ என் கன்னத்தில் முத்தம் தீட்டினாயே, அப்போதா?
நான் வெட்கத்தில் சிணுங்கினேனே, அப்போதா?
உன் உயிர் என்னுள், வளர்ந்ததே, அப்போதா?
அதை நான் இப்புவிக்கு அறிமுகப்படுத்தினேனே, அப்போதா?
நம் சிற்றுயிர் என்னை அம்மா என்றழைத்ததே, அப்போதா?
நீ தோய்ந்து போனபோது உன்னை அரவணைத்தேனே, அப்போதா?
உன் நினைவுகளோடு நான் நிரந்தரமாய் உறங்கினேனே, அப்போதா?
நான் எப்போது பெண் ஆனேன்?
{kunena_discuss:779}