ஏக்கம் - அபிநயா
கருவறையே விட்டு வந்ததும்
கல்லறையாய் மாறிப்போவது
எனக்கான பரிசா ????? ...
நான் பிறந்ததும்
என் பெற்றவர்கள் ஆசையாக
தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிட்டு
முத்தம் பதிப்பார்கள் என்று
நினைத்து எதிர்ப்பார்த்து காத்திருக்க ..
அவரோ என்னை சத்தமே இல்லாமல்
கல்லறை அணுப்பினார்
நான் ஒரு பெண் குழந்தையாக பிறந்ததால். ..
இது என் சாபமா...
இல்லை தவமிருந்த என் தாயிற்கான தண்டனையா ??
விடை தெரியாமல் நான் போகிறேன்..
ஆனால் மறுபடியும் பிறக்கும் வரம் வேண்டும்
உங்கள் மகளாக. .
அப்போது என்னை புரிந்து அரவணைப்பீர்கள்
என்ற நம்பிக்கையில் காத்திருப்பேன்..
இப்படிக்கு கல்லறையில் வாழும் உங்கள் மகள்
{kunena_discuss:779}