தனிமையில் உணர்ந்தேன் என்னவளை - அபிநயா
யாருமில்லா தனிமையில்
உன் நினைவுகளில்
உன்னை எப்போது பார்ப்போம்
என்று காத்திருந்ததில்
உணர்ந்தேன் என் காதலை
சிரிப்பு என்பதையே என் உதடுக்குள்
வைத்திருத்த என்னையும்
சிறு சிறு கதைகள் பேசி
சிரிக்க வைத்தாய்
அடிக்கடி கோபம் கொண்டு
சண்டை போடும் என்னையும்
உன் சிறு குறும்புகளில் கோபம் மறைத்து
என் இதழ்கடையில் புன்னகை பூக்க செய்தாய் ..
எதாவது தவறு செய்து தந்தையிடம்
மன்னிப்பு கேட்கும் சிறு பிள்ளை போல
என்னிடம் வந்து கண்களை சுருக்கி
செவியில் கைவைத்து மண்டியிட்டு நின்ற போது
என் கோபமும் மறைய வைத்தாய் ..
இப்படி அழகாய் மன்னிப்பு கேட்டால்
எப்படி பெண்ணே கோபம் வரும் ...
என்னவளே என்று என்னுளே வந்தாய்
என்று தெரியாமல் குழம்பினேன் ...
பின்பு சிரித்தேன் ...
என்றும் என் நினைவில்
நீதான் இருக்கிறாய் என்று உணர்ந்து ....
{kunena_discuss:779}