(Reading time: 1 - 2 minutes)

தனிமையில் உணர்ந்தேன் என்னவளை - அபிநயா

Unarnthen

யாருமில்லா  தனிமையில் 

உன்  நினைவுகளில் 

உன்னை  எப்போது  பார்ப்போம் 

என்று  காத்திருந்ததில் 

உணர்ந்தேன்  என்  காதலை

 

சிரிப்பு  என்பதையே  என்  உதடுக்குள்

 வைத்திருத்த  என்னையும் 

சிறு  சிறு  கதைகள்  பேசி 

சிரிக்க  வைத்தாய்

 

அடிக்கடி  கோபம்  கொண்டு 

சண்டை போடும்  என்னையும் 

உன்  சிறு குறும்புகளில் கோபம்  மறைத்து 

என்  இதழ்கடையில்  புன்னகை  பூக்க  செய்தாய் ..

 

எதாவது  தவறு  செய்து  தந்தையிடம்  

மன்னிப்பு  கேட்கும்  சிறு  பிள்ளை  போல

என்னிடம்  வந்து  கண்களை  சுருக்கி 

செவியில்  கைவைத்து  மண்டியிட்டு  நின்ற  போது 

என் கோபமும்  மறைய  வைத்தாய் ..

இப்படி அழகாய் மன்னிப்பு கேட்டால் 

எப்படி பெண்ணே  கோபம் வரும் ... 

 

என்னவளே என்று  என்னுளே  வந்தாய்  

என்று  தெரியாமல்  குழம்பினேன் ...

பின்பு  சிரித்தேன் ...

என்றும் என்  நினைவில் 

நீதான்  இருக்கிறாய் என்று  உணர்ந்து .... 

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.