அன்பு சகோதரிக்கு அண்ணனின் மடல் - ஆனந்த் ஷியாம்
என் வாழ்வில்
நீ வந்த நேரம்
என் மனதில் ஒரு
சந்தோஷ புயல்
வீசிய காலம்...
காரணம் அறியாமலே
நான் பிதற்ற
காரணம் தெரிந்த நீயோ
கூறிய அவ்வொற்றை சொல்
போதுமடி
ஏன் ஈரேழு ஜென்ம பயனை
அடைந்த சுகம் காண...
அண்ணா என்ற சொல்லில்
அடங்கிய தந்தை பாசம்
என் அன்பிற்குரிய
என் மகள் உனக்கே உனக்கே
உனக்கே உரித்தாகுமடி...
அடுத்தோர் ஜென்மம்
நாம் எடுத்தாள்
என் மகளாக பிறந்து
என் மடியில் தவழ்ந்து
என்னாலான பூஞ்செடியாக
நீ மலர
எப்போதும் விருப்பம் கொள்வேன்..
என்றென்றும் உன் அன்பிற்கு
உரியவனாய்
உன்னிடம் தந்தை பாசம்
புரியும் அன்பு அண்ணன்....
{kunena_discuss:779}