வேண்டுதல் - கிருஷ்ணபாபு
கண்களை இறுக்கி மூடி
முணுமுணுப்பாய் வேண்டினாள்
ரோட்டோரப் பிள்ளையாரிடம்
அச்சிறுமி.
சற்றே நெகிழ்ந்து எழுந்தேன்.
காலடியில் கிடந்த குட்டிப்பேனாவை
கையில் எடுத்தேன்.
'பாப்பா,இது உன் பேனாவா பார்!'
'ஐ!என் ராசியான பேனா!
இப்பதான் பிள்ளையார்ட்ட கேட்டேன்!
தேங்க்ஸ்ணா!'
மகிழ்ந்து ஓடினாள் சிறுமி.
சிரித்துக்கொண்டேன்
தும்பிக்கையை மறைத்தபடி!
{kunena_discuss:779}