கவிதை - என் காதலன் - அனிதா சங்கர்
என் காதலன்
என்னுடன் எப்பொழுதும் இருப்பவன்
என் உறக்கத்திலும் என்னை பிரியாமல் இருப்பவன்
நான் செல்லும் இடங்களில் சில நேரம்
மலர்களை விரித்து வைத்தும் சில நேரம்
முட்களை தூவியும் என்னை வரவேற்பவன்
இன்பம் துன்பம் என்ற இரண்டு பரிசுகளையும்
மாற்றி மாற்றி தந்து அவைகளில்
முழ்கடிப்பவன் என் காதலன்
அவற்றிலிருந்து என்னை மீட்டெடுக்கும்
ரகசியத்தை அறிந்தவனும் அவனே
என் கைபிடித்து என்னை வழிநடத்துபவன்
என் உதட்டில் உறையும் சிரிப்புக்கும்
என் கண்களில் தேங்கும் கண்ணீருக்கும்
காரணகர்த்தாவாக இருப்பவன் அவன்
அவன் என் காதலன்
நான் மடிந்தால் அவனும் மடிந்துவிடுவான்
அவனை நினைக்காமல் இருக்க நினைத்தும்
மறக்கமுடியமாலும் தவிக்கிறேன்
ஏன்னெனில் என் காதலன் என் வாழ்க்கை
{kunena_discuss:779}