கவிதை - என் உள்ளம்... - கார்திகா.ஜெ
உன்னுள் பல மாற்றம் இருந்தும்
என்னுள் மாற்றம் வராதது ஏனோ
வான் மழை பொழிந்த காலத்தில் சூரிய ஒளி நீயோ
வாடை காற்றின் நிழலும் நீயோ
எத்தனை இன்பம் உன்னில்
கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் நெஞ்சில் தஞ்சம் எனது ஊர் என்ற சொல்லில்
சிலிரப்பூட்டும் வண்ணம் உன் பெயரோ
ஓர் ஒலியில் மாறுதே என் உள்ளம்.....