ஞாபக பூமழை - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்
ஒற்றை குடைக்குள்
நுழைந்துகொண்ட நாட்கள்,
மழையில் நனைந்து தவித்து
காகித கப்பல் விட்ட தருணங்கள்,
சப்தமிட்டு நூலக வாயிலில் மண்டியிட்ட நிமிடங்கள்,
திருடித் தின்று விட்டு
தெரியாதென பொய்யுரைத்த நொடிகள்,
கண்கள் கட்டி ஆசிரியர் அறையில் விளையாடிய நாட்கள்,
எப்போதும் எழுதபடாத தேர்வுகள்,
எழுதிமுடித்து மதிப்பெண்தாள் பார்த்து சிரித்துகொண்ட நாட்கள்,
இவைகள் யாவையும் மக்கிபோகாது ,
தோழமையை,
மனதில் விதைத்துக்கொண்ட,
கல்லூரி நாட்கள்
இனிமையானதுதான்!
{kunena_discuss:779}