(Reading time: 8 - 15 minutes)

மூடனுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருக்கவே தான் எல்லோரையும் எண்ணுவதாகக் கூறினான். அனைவரும் வரிசையில் வந்து நின்றார்கள். அவன் எண்ண ஆரம்பித்தான்.

ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு............... மூடன் தன்னைத் தானே எண்ணிக் கொள்ளவில்லை.

"ஐயையோ நாம அஞ்சு பேர் தான் வந்திருக்கோமா?" அப்போ நம்மள்ல ஒருத்தங்களை ஆறு விழுங்கிடுச்சே........" எனச் சொல்ல அதைக் கேட்ட அனைவரும் அழ ஆரம்பித்தார்கள்.

சற்று நேரத்தில் அழுது ஓய்ந்ததும்,

"சரி சரி நான் இன்னும் ஒரு முறை எண்ணிப் பார்க்கிறேன் என்று மட்டி வந்து எண்ணத் துவங்கினான்.

ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு................ அவனும் தன்னையும் சேர்த்து எண்ணாமல் ஆறு பேர் எண்ணிக்கைக்கு பதில் , ஐந்து பேர் எண்ணிக்கை வந்ததும், 

"ஓஓஓ நம்மள்ல யாரையோ ஆறு விழுங்கிடுச்சே........" என்று அழ ஆரம்பித்தான், கூடவே மற்ற அனைவரும் சேர்ந்து அழ ஆரம்பித்தார்கள்.

மனம் கேட்காமல் மற்றச் சீடர்களும் தங்களுடைய எண்ணிக்கையை எண்ணிப் பார்ப்பதுவும், தொடர்ந்து அழுகைக் கூப்பாடு போடுவதுமாக இருக்க இப்போது பரமார்த்த குரு வந்து எண்ன ஆரம்பித்தார்.

ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு...........ஐயோ ஆறாவதா வந்தவனை ஆறு முழுங்கிடுச்சே என்று அவரும் குய்யோ முறையோவென அழ ஆரம்பித்தார்.

இங்கு நடந்துக் கொண்டு இருப்ப்தை அந்த ஊர்க்காரன் ஒருவன் பார்த்தான். அவனுக்கு அதைப் பார்த்து மிக எரிச்சலாக இருந்தது. விபரம் என்ன என்றுத் தெரிந்துக் கொள்ள அருகேச் சென்றான்.

"என்னவாயிற்று?" என விசாரிக்க குருவும் சொல்லலானார்.

"நாங்கள் அக்கரையிலிருந்து இக்கரை 6 பேர் வந்தோம். ஆனால், இந்த பொல்லாத ஆறு எங்களுள் ஒருவனை விழுங்கி விட்டது. அந்த துயரம் தாளாமல் நாங்கள் அழுகின்றோம்." 

அந்த ஊர்க்காரனுக்கு அவர்கள் சொன்னதைக் கேட்டதும்,

"ஆறு விழுங்கிற்றா? இவர்கள் ஆறு பேர் தானே இருக்கின்றார்கள் , பிறகு ஏன் அப்படிச் சொல்லுகிறார்கள்?" என்று எண்ணியவன்,

"சரி சரி என் முன்னால் ஒருமுறை நீங்கள் எவ்வாறு எண்ணுகிறீர்கள் என்று எண்ணிக் காண்பியுங்கள் பார்க்கலாம்.' என்றான். 

மறுபடியும் அவர்கள் தன்னை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எஞ்சியுள்ள ஐவரையும் எண்ணிக் கொண்டு , ஒருவனை ஆறு விழுங்கி விட்டதாக அழுவதைக் கண்டு, அவர்கள் எவ்வளவு சிந்தனையற்ற மூடர்கள் என்றுச் சிந்தித்தவனாய் ஒரு யோசனையை செயல் படுத்த எண்ணினான்,

:சரி , நான் ஒருவேளை உங்கள் எண்ணிக்கையை மறுபடியும் 6 ஆக ஆக்கினால் என்ன தருவீர்கள்? எனக் கேட்டான், அவன் அவ்வாறுச் செய்தால் அவனுக்கு பரமார்த்த குரு தங்களிடம் இருப்பதை எல்லாம் தருவதாக உறுதியளித்தார்.

"சரி சரி அப்படியென்றால் வரிசையாக நில்லுங்கள் " என்று அவர்களை நிற்க வைத்தான், தன்னுடைய யோசனையைச் சொன்னான்.

"நான் என் கையிலுள்ள உலக்கையால் வரிசையாக நிற்கும் உங்கள் ஒவ்வொருவர் தலையிலும் வரிசையாக அடிப்பேன். அப்போது உங்கள் எண்ணிக்கையை நீங்கள் சொல்ல வேண்டும். என்ன ஆயத்தமாக இருக்கிறீர்களா?" எனக் கேட்டான்.

"ஆம் ஆயத்தமாக இருக்கிறோம்" என்று அனைவரும் குரலெழுப்பினார்கள்.

முதலில் பரமார்த்த குருவின் தலையில் உலக்கையால் அடித்தான்.

டொம்........

ஸ்ஸ்ஸ்....... நான் பரமார்த்த குரு ஒன்று

டொம்........

ஐயோ வலிக்குதே........ நான் மட்டி இரண்டு.

டொம்........

அம்மா.....வலி தாங்கலியே.......நான் மடையன் மூன்று

டொம்........

ஸ்ஸ்ஸ்..ஆஆ.. நான் மூடன் நான்கு.

டொம்........

ஐயையோ.ஸ்ஸ்..ஸ்ஸ்.. மிலேச்சன் ஐந்து

டொம்........

ஐயோ ஐயோ ஐயோ...ஸ்ஸ்ஸ்... பேதை ஆறு.

என ஆறு பேரும் எண்ணிக்கைச் சொல்லி முடித்ததும் தலை விண் விண்னென்று வலித்துக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாக ஆரவரித்தார்கள். 

"நாம் ஆறு பேரும் பத்திரமாக இருக்கிறோம். யாரையும் ஆறு விழுங்கவில்லை. நமக்கு உலக்கையால் அடித்து உதவி செய்த இந்த அன்பருக்கு நம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து நன்றிச் சொல்வோம் வாருங்கள்" என்றார் பரமார்த்த குரு.

அந்த உலக்கைக் காரனும் கிடைத்தது வாய்ப்பென்று அவர்களிடமிருந்து கிடைத்தவற்றைச் சேகரித்தபடிச் சென்றான்.

பரமார்த்த குருவும் சீடர்களும் தங்களுடைய பயணத்தை தொடர்ந்தார்கள்.

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.