முழங்காலில் மண்டியிட்டு
கையில் ஒற்றை ரோஜாவுடன்
தன் இரு கைகளையும் விரித்து
அவளை நோக்கி
பார்த்திருத்தான் அவன்...
திகைத்து விழித்து
இமை மூட மறந்த
நிலையில் அவள்...
அச்செந்நிற ரோஜாவை நீட்டி
விளித்தான் அவளிடம்
"என்னை உன்னவனாய்
ஏற்பாயா கண்மணியே"
தனக்காய் பார்த்திருக்கும்
மாப்பிள்ளையென
இவள் பெற்றோர்
அனுப்பிய புகைப்படம் விரிகிறது
அவளின் மனத்திரையில்....
அக்கணம் அவள் நினைவில்
மணி அடிக்கிறது
அந்த N இவன் தானென்று...
பூங்கொத்தில்
அன்பை விதைத்து
புத்துணர்வளித்த
அன்பாளன் இவன் தானென்று...
N நிலாபெண் என
இவள் நினைத்திருக்க
N நிலவன் என
நிரூப்பித்தான் அவன் இன்று...
"நீ நீயாய் இருக்க
ஆசை உனக்கு
உன்னை அப்படியே
ஏற்றுக் கொள்ள
ஆசையுண்டு எனக்கு....
என்னையே
என் காதலையே
உன் பிறந்தநாள் பரிசாய்
அளிக்கிறேன் இனியவளே..
உன் புன்னகை இப்படியே
இதழில் உறைந்திட
வாழ்த்துகிறேன் கண்ணம்மா
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சாருலதா!!!!!"
அவனுறைக்க....
மெய் மறந்து சிலையென
நின்றாள் அவள்...
தனக்காய் தன்
பெற்றவர்கள்
நிச்சயித்த ஒருவன்..
தனக்காய் தன்னை
நேசிக்கும் ஒருவன்...
தன் இன்பம் மட்டுமே
முதன்மையாய்
எண்ணும் ஒருவன்...
இதயம் படபடக்க
தாறுமாறாய் துடிதுடிக்க
நாடி நரம்பெல்லாம்
மகிழ்ச்சியில் திளைத்திருக்க
பெற்றுக் கொண்டாள்
அவ்வொற்றை ரோஜாவை
அவன் காதலின் அச்சாரமாய்
அவள் பிறந்தநாளின் பரிசாய்....
இருவரும் திருமண பந்தத்தில்
இணைந்து மகிழ்வுடன் வாழ
வாழ்த்துவோம் நாமும்....
{kunena_discuss:785}