சிறுகதை - மலையேறிய ஆறு! - ரவை
பிச்சைக்காரனிடமே பிச்சையா? பைத்தியமா? ஆமாம், இந்த முகத்தைப் பார்த்தமாதிரி இருக்கே?
மண்டையை குடைத்துக் கொண்டான், அந்த பிச்சைக்காரன்!
ஆங்! ஞாபகம் வந்து விட்டது! இவர்தானே எனக்கு ஒரு ரூபாய் பிச்சை போடுவாரு, ஆங்! கல், மணல் விக்கிற முதலாளியாச்சே! ஐயோ! இவருக்கா இந்த நிலை?
மகாகவி பாரதியும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் மற்றும் பலரும் கனவு கண்ட புதிய சமுதாயம், உருவம் பெறப் போகிறது, கடுமையான கொரோனா பாதிப்பால்! ஏழைகள் செல்வந்தர் ஆகிறாரோ இல்லையோ, பல செல்வந்தர்கள் ஏழைகள் ஆவது திண்ணம்! மண்ணையும் கல்லையும் விற்றுக் கிடைத்த பணத்தில் கோட்டை கட்டிய முதலாளி, முக்காடு போட்டு மூலையிலே முடங்கிவிட்டான், இரண்டே மாதங்களில்! ஏழ்மையின் இறுக்கிப்பிடி அவனை எழுந்திருக்கவிடாது படுக்கையில் தள்ளிவிட்டது! பணத்தை எவரும் அவனிடமிருந்து எடுத்துச் செல்லவில்லை!
கல்லாவில் நிரம்பிவழிந்த பணவரத்து வற்றிவிட்டது!
அலைமோதிய கூட்டம் கரைந்து, மெலிந்து, வரண்டு விட்டது!
அவனைச் சுற்றியிருந்த கூட்டமும்தான்! அதில், பெரும்பாலோர், வெளி மாநிலத்திலிருந்து வந்தோர்!
அவர்கள் அனைவரும் நடந்தே தங்கள் ஊருக்குத் திரும்ப, பயணத்தை துவக்கி விட்டார்கள். ஒன்று, இரண்டல்ல, ஆயிரம், எண்ணூறு கிலோமீட்டர்!
இடுப்பில் கைக்குழந்தை, கையில் துணிமூட்டை, முகத்தில் பசி தந்த களைப்பு, நடையில் சோர்வு, பார்க்கப் பரிதாபம்!
வேறுவழியின்றி, இங்கு புலம் பெயர்ந்து குடியேறியவர்கள், இப்போது, வேறு வழியின்றி, திரும்புகிறார்கள், ஊருக்கு!
குவாரிகள் காணாமல் போய்விடவில்லை, ஆற்றுமணல் ஆவியாகிவிடவில்லை!
கட்டிடம் கட்டுகிற வேலை அப்படி அப்படியே நின்றுபோய் விட்டது!
பில்டருக்கு பணவரவு நின்றுவிட்டது! ஏனெனில், ரியல் எஸ்டேட் கம்பெனிகள் பணம் இல்லாமல் தவிக்கின்றன!
தொழில்கள் முடங்கி விட்டன, மூன்றுமாத ஊரடங்கில்! நிலுவையில் உள்ள வரவுகள், வரண்டுவிட்டன!
பிச்சைக்காரன் முத்துவிடம் பிச்சை கேட்கிறார், தனகோடி!
ஏனெனில், தனகோடிக்கு கடன் தந்த கந்துவட்டிக்காரன்கள், அவருடைய வீட்டை பிடுங்கிக்