(Reading time: 2 - 4 minutes)

இனிப்பு – சுமதி

ராஜம் வேலையெல்லாம் முடித்து திரும்பும் பொழுது வளர்மதி ராஜம் கையில் ஒரு இனிப்பு பொட்டலம் கொடுத்தாள். ராஜம் வளர்மதி வீட்டில் வீட்டு வேலை மற்றும் தோட்ட வேலை செய்பவள் . அன்று அவர்கள் வீட்டில் விசேஷம் என்பதால் செய்த இனிப்பு கொஞ்சம் ராஜத்துக்கும்.

inippuராஜம் இது மாதிரி இனிப்பெல்லாம் சாப்பிட்டு வருடங்கள் பல ஆகிவிட்டன . நன்றாக வாழ்ந்தவர்கள் தான் அவர்களும் . அவள் கணவன் சிறு வயதிலேயே தவறிவிட்டான். அவளுக்கு ஒரே மகன் செந்தில் . கஷ்ட்டப்பட்டு ஆளாக்கினாள். அவன் நிறைய பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்கிறேன் என்று போனவன் தான் . அவன் செல்லும் பொழுது அவனுக்கு திருமணமாகி அவன் மனைவி வானதி கர்ப்பவதி . குழந்தை குமரனும் பிறந்து அவனுக்கு ஐந்து வயதாகிறது . செந்தில் என்ன ஆனான் எப்படி இருக்கிறான் என்று ஒரு தகவலும் இல்லை . செந்தில் திரும்ப வருவான் என்ற நம்பிக்கையும் மங்கிவிட்டது. ராஜமும் அவள் மருமகள் வானதியும் வீட்டு வேலை செய்து குமரனை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் . குமரன் தான் அவர்கள் வாழ்கையின் ஒரே நம்பிக்கை . ஆதாரம் . எல்லாமும் .

குமரன் பள்ளியிலிருந்து வருவதற்காக ராஜம் ஆவலுடன் காத்துகொண்டிருந்தாள் . அவன் வந்ததும் அவனுக்கு இனிப்பை ஆசையுடன் நீட்டினாள் .

“என் ராசா .. இனிப்பு சாப்பிடு கண்ணு ”.

அவன் அதில் கொஞ்சம் சாப்பிட்டு பார்த்துவிட்டு

“ஐயே பாட்டி இது நல்லாவே இல்லை .. நீயே சாப்பிடு … இந்தா ” என்று கொடுத்துவிட்டு வீட்டினுள் சென்றான் .

ராஜத்தால் இதை தாங்க முடியவில்லை. அவளுக்கு கண்ணில் நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது . அவள் சாப்பிட்டும் பார்த்தாள். ருசியாகத்தான் இருந்தது . அவள் பாசத்தை புரிந்துகொள்ளாமல் பேசிவிட்டானே என்று அங்கலாயித்துகொண்டே பக்கத்தில் உள்ள கோவிலுக்கு நடக்க ஆரம்பித்தாள்.

தே சமயம் வீட்டுக்குள்ளே நடந்த உரையாடல் – வானதி குமரனிடம்

“ஏன்டா இப்படி பேசினே …உன் பாட்டி மனசை புண்படுத்தலாமா சொல்லு ?” என்று கோபமாக கேட்டாள் .

அதற்கு குமரனோ

“ அட போம்மா எந்த நல்ல சாப்பாடு கிடைத்தாலும் பாட்டி எனக்கு தான் கொடுக்குது . இன்று ஒரு நாளாவது அது சாப்பிடட்டுமே என்று தான் அப்படி பேசினேன் . அது இந்த மாதிரி இனிப்பு சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகி இருக்கும் … இப்போ ஒண்ணுமில்ல … பாட்டி வந்தவுடன் நான் போய் ஆசையா பாட்டின்னு கூப்பிட்டா அது ரொம்ப சந்தோசமாயிடும் … நான் பார்த்துக்கறேன்ம்மா” என்று பெரிய மனுஷத்தோரணையில் பேசிக்கொண்டு இருந்தான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.