மண்ணில் இந்த காதலின்றி.. - நீலா
This is entry #46 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
எவண்டீ உன்ன பெத்தான்....பெத்தான்...
அவன் கையில கிடைச்சா செத்தான்...செத்தான்...
எவண்டீ உன்ன பெத்தான்....பெத்தான்... பெத்தான்
அவன் கையில கிடைச்சா செத்தான்...செத்தான்...செத்தான்...
ஆடீ க்யூ5 ஹைபிரிடில் இந்த பாடல் ஒலித்துக்கொண்டிருக்க அதன் கண்னாடிகளை ஏற்றிவிட்டு அதன் ஒலியை இன்னும் கூட்டினாள் அவினி.
டேய்... வேணாம் டா... அவினி... இந்த பாட்டு போட்டது உங்க அம்மாவுக்கு தெரிஞ்சுதுனு வை... நம்ம அவுட்டிங் பிளான் இன்னைக்கு அம்பேல் தான்...' என்றது டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த அவளது தந்தை ப்ரபு சிவநாதன்.
நோ டாட்... இப்போ இந்த பாட்டு தான் வேணும்!
டேய்... அம்மாவும் சுந்தரும் வராங்கடா... அப்புறமா கேட்கலாம்டா... என்னைதான் டா அம்மா கோவிச்சுக்குவா...
நோ டாட்...என் ஸ்வீட் டாட்ல
அதற்குள் அவினியின் அம்மாவும் அவள் தம்பியும் காருக்கு அருகில் வந்து கதவையும் திறந்துவிட்டனர்.
முன் கதவை திறந்த மனைவியின் அனல் பார்வையே அவளது கோபத்தை காட்டிக்கொடுத்தது.
டேய் அவினி... அப்பா பாவம் டா...அம்மா என்னதாண்டா திட்டுவா... நான் பாட்டை நிறுத்தறேன்...' என்று நிறுத்திவிட்டான் ப்ரபு.
மாம்...எனக்கு அந்த பாட்டு கேட்கனும் இப்போவே..' என்றாள் தமிழிசை அவினி தன் அன்னை நீலாம்பரியை பார்த்து.
வாயிலேயே போடுவேன்... இன்னோரு முறை மாம்மா... மாம்... மம்மினு கூப்பிட்டு பாரு... அடி எப்படி விழுகுதுனு மட்டும் பாரு' என்றாள் அவள் அன்னை நீலாம்பரி.
டாடீ... பாருங்க டாடீ அம்மாவ...' அவினி தான்.
நிலா..' என்று ப்ரபு தொடங்குவதற்குள் இரண்டு அடி விழுந்தது அவினிக்கு.
நிலா... நிறுத்து! எத்தன முற சொல்லியிருக்கேன் குழந்தைகளை அடிக்காதனு! – ப்ரபு
காரில் ஏறி அமர்ந்த படியே, ஆமா என்னை மட்டும் சொல்லுங்க... உங்க பொண்ணை மட்டும் ஒன்னும் சொல்லாதீங்க... எனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சும் அதையே செய்ய வேண்டியது..சுந்தர் ஏறினியா...'
அதுக்கு குழந்தையை இப்படி அடிப்பியா?? என் குழந்தைகளை அடிக்கற உரிமை உனக்கு யாரு கொடுத்தது??
யாரு கொடுக்கனும்னு கேட்கறேன்??? உங்க குழந்தைகளா??? என்ன ப்ரபு நான் இல்லாம எங்கயிருந்து வந்தாங்க உங்க பிள்ளைங்க??? அவ்வளவு ஆயிடுச்சா??
அப்பா... ஏன் பா?? இப்போ கிளம்ப போறீங்களா...இல்லையா?? அம்மா நீங்க டென்ஷன் ஆகாதீங்கமா... இசை ஏண்டீ இப்படி பண்ற??' என்று அனைவரையும் சமாதானப்படுத்த முனைந்தான் சுந்தர் என்கிற சுந்தரவடிவேல். ஏழு வயது சிறுவன்!
ப்ரபு காரை கிளப்ப வாக்குவாதம் தொடர்ந்தது உள்ளே!
சுந்தர்... டீ போட்டு கூப்பிடாதேனு எத்தன முற சொல்லியிருக்கேன்.. உன்னைவிட நான் மூணு வயசு பெரியவ...அக்கானு ரெஸ்பேக்ட் இருக்காடா உன்கிட்ட..
இசை... ஜஸ்ட் த்ரீ இயர்ஸ் தான் பெரியவ நீ!!
சுந்தர்.... அம்மாவைவிட அருள் மாமா 4 இயர்ஸ் தான் சின்னவங்க... ஆனா அக்கானு தானே கூப்பிடறாங்க... ஏன் சித்து அத்தை...சஞ்சுப்பா...விஷ்வப்பா..கூட அப்பாவ அண்ணானு தானே கூப்பிடறாங்க...உனக்கு மட்டும் என்னடா??
முடியாது போடீ... - என்றான் சுந்தர். அதற்கும் அடி விழுந்தது அம்மாவிடமிருந்து!
காரினை ஓரமாய் நிறுத்திவிட்டு 'நீலா.. நீ டிரைவ் பண்ணு என்று இறங்கிவிட்டான் ப்ரபு!
ஆக அய்யா இப்போ பயங்கற கோபத்துல இருக்கார்.. நிலா... காணாம போயிட்டு...நீலாவாமே நானு!' என்று மனதில் எண்ணியவாறே அமைதியாய் வண்டியை செலுத்த தொடங்கினாள் நீலாம்பரி. கார் பிட்ஸ்பர்க் பெருமாள் கோவிலை நோக்கி சீறி பாய்ந்தது!
சுந்தர்... அவினிய நீ அக்கானு தான் கூப்பிடனும்.. எவ்வளவு வயசு வித்யாசம் இருந்தாலும் முறை வெச்சுதான் கூப்பிடனும்...நீ ஏன் அவினிய அக்கானு தான் கூப்பிடனும்னு அம்மா சொல்லறானு கேட்டிருக்கியா??
இல்லபா..
உன் அருள் மாமாவ பாத்திருக்கல நீ..அவன் பெரிய போலீஸ் அப்பீஸர்னு தெரியும்ல...
ஆமா பா..
ஆனா... அதே மாமா... உங்க அம்மா சொன்னா அப்படியே கேட்பாருல...ஏன்னா அது அவனோட அக்கா... அவனுக்கு அக்கானா தனி பாசம்... மரியாதை... எல்லாமே..
அதுக்கும்... அக்கானு கூப்பிடறத்துக்கும் என்னபா ரிலேஷன்ஷிப்?? - சுந்தர்.
நீ அவினிய பெயர் வெச்சி கூப்பிடற வை.....ஒரு வயசுக்கு மேல உனக்கு அவளுக்கு ரெஸ்பக்ட் கொடுக்கனும்னு தோணாது... அவ மேல ரெஸ்பக்ட் போயிட்டுனா... அந்த பாண்டிங்க்...ரிலேஷன்ஷிப்... எதுவுமே வராது...அப்புறம் அவளை இக்னோர் செய்வ... நீ செய்தா அவளும் அதையே செய்வா..அப்புறம் எங்களுக்கு அருள்.. சஞ்ஜய்.. சந்தோஷ்.. சித்ரா நு இருக்க சிப்லிங்ஸ் மாதிரி உங்களுக்கு யாருமே இருக்க மாட்டாங்க... இதுயேல்லாம் தேவையா??