(Reading time: 9 - 18 minutes)

தன்னந்தனிமையிலே... - சிந்தியா

This is entry #55 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

thanimai

"சிந்து" ... "சிந்து மா" இரு வேறு குரல் கேட்டு நல்ல மதிய தூக்கத்தில் இருந்து விழித்தாள் சிந்து என்னும் சிந்துஜா

“ஹ்ம்ம் இந்த அம்மாக்கு எப்படி தான் நான் தூங்கிட்டு இருக்கேன்னு தெரியுதோ!“என்று அலுத்தபடி சோம்பலாக வந்து “என்னமா” என்றாள் .

“என்னடி தூங்கி எழுந்து அப்படியே வர நான் என்ன சொன்னேன் “என்று முறைத்த  அம்மாவை பார்த்து குழம்பி அருகில் கன்னத்தில் கை வைத்து அவர்கள் பேச்சு வார்த்தையை பார்த்து கொண்டு இருந்த அக்காவை கண் ஜாடை  காட்டி “என்னகா அம்மா ஏன் இவ்ளோ பாயில் ஆகுறாங்க ?? என்று கேட்டாள் .

அக்கா மதிமலர் அம்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டு “..காலைல  சாப்பிடும் பொது நல்லா பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டி அம்மா நான் பிங்க் சோலி போட்டுட்டு வரேன் அதில் கொஞ்சம் ஹூக் விட்டு போச்சு சரி பண்ண சொல்லி சொன்னியா இல்லையா !!!!? “ என்றதும், சிந்துவின் கை தானாக தலைக்கு சென்றது (வேறு எதுக்கு அடித்து கொள்ள தான்). இன்று அவள் மாமாவின் பெண்ணிற்கு நிச்சயம் மறுநாள்  கல்யாணம்

முதலில் எனக்கு ப்ராஜெக்ட் வேலை இருக்கு வரவில்லை என்று சொல்லி விட்டாள். ஆனால் மாமா பெண்ணின் தொடர் வற்புறுத்தலால் போகலாம் என்று அம்மாவிடம் சொன்னது நினைவு வந்தது...(இப்போ வந்து)

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தாள் எல்லோரும் கிளம்பி நின்று கொண்டு இருப்பதை பார்த்தவள் கடைசியாக தம்பி சரவணனின் முறைப்பை பார்த்ததும் "நீங்க எல்லாம் போங்க நான் நாளை கல்யாணத்திற்கு வரேன் என்றாள்.

அப்பா அதிருப்தியான பார்வை பார்த்து “ அம்மு கொஞ்ச நேரம் நிக்கறோம் சோலி போட்டு தலை மட்டும் சீவிட்டு வாடா ..அங்க போய் மிச்ச அலங்காரம் பண்ணிக்கலாம்” என்றார் .

சரவணன் பல்லை கடித்து கொண்டு" அப்ப்ப்ப்பா அவள் நீங்க சொன்னதை செய்யவே 1 மணி நேரம் பண்ணுவா பா .. அப்புறம் நாம நடு ராத்திரி தான் மண்டபம் போக முடியும் .." என்றவன் " வரீங்கலா? இல்லையா?” என்று மிரட்ட ஆரம்பித்தான் .

ரோஷம் வந்தவளாக நம் நாயகி “ போய்ட்டு வாங்க அப்பா இன்று ஒரு இரவு தான நான் இருந்துபேன் “ என்று சமாதானம் செய்து விட்டு சரவணனை பார்த்து பழிப்பு காட்டி “இவன் இல்லாம எனக்கு பிடித்த படம் பார்த்து கொண்டு, எனக்கு பிடித்ததை செய்து கொண்டு தனியா ரொம்ப நிம்மதியா இருப்பேன் போயிட்டு வாங்க அம்மா “ என்று குறும்புடன் சொன்னாள் .

சில பல அறிவுரை அவர்களிடம் வாங்கி கொண்டு  அவர்களை அனுப்பி வைத்து விட்டு நிம்மதியா விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.

ருள் வரும் வரை நன்றாக உறங்கியவள் (பொம்பளை பிள்ளை 6 மணிக்கு மேல தூங்க கூடாது டி என்று திட்ட அம்மா இல்லையே.... அதான்) கண் விழித்ததே எங்கோ ஒலித்த அழைப்பு மணியால் தான் ..

அச்சோ பால் ஊத்தும் பாட்டி போலவே செத்தோம் இன்னைக்கு என்று சொல்லி கொண்டே எழுந்து வந்து கதவை திறந்தாள் ..

“இப்போ இவங்க வேற இலவச அறிவுரை சொல்வாங்களே என்று சலிப்பு  வந்தது ..வெளியில் பால் கொண்டு வரும் பாட்டி நின்று கொண்டு இருந்தார்கள்..இவள் வந்ததும் எதுவும் சொல்லாமல் வாய்க்குள் எதையோ முணுமுணுத்துக் கொண்டு பால் ஊத்தினார்.

“பாட்டி திட்டினா காதில விழுகனும் ஏன் உங்க வாயுக்குள முழுங்கறீங்க “ என்று வம்பு இழுத்தாள் .

அவளை முறைத்த பாட்டி ..."பார்த்து சூதானமா இருந்துக்கோ பாப்பா “ என்றார். “என்னடா இது அறிவுரை இலவசம் என்பது போல எப்போ பார்த்தாலும் பேசுவாங்க இப்போ என்ன...??! என்று புரியாமல் பார்த்தவளிடம்.

“அம்மா சொல்லிட்டு போனாங்க நீ மட்டும் தான் இருக்க போற , இருட்டுக்கு கூட சில நேரம் பயப்படுவ என சொல்லி பார்த்துக்க சொன்னாங்க நான் முடிந்தா வேலை வெரசா முடிச்சுட்டு ரவைக்கு உறங்க வாறேன் “என்றார்.

“சரி பாட்டி “ என்று சொல்லி அனுப்பியவள் மனதிற்குள் “அம்மம்மா... இப்படி என்னை  டமேஜ் பண்ணிட்டு போய் இருக்கீங்களே “ என்று பல்லை கடித்தாள். பின் தன்னை சற்று அலங்காரம் செய்து உற்சாகப்படுத்தி கொண்டவள் மனதிற்குள் “ச்சே இந்த பாட்டி அறிவுரை சொல்லி இருந்தா கூட பரவால்ல இப்படி பயந்துக்கமா இரு என சொல்லி பயப்பட வைத்து விட்டாங்களே .. இப்போ என்ன பண்ணலாம் என யோசித்தவள் முன் தொலைக்காட்சி “யாம் இருக்க என்ன பயம் என்றது.”அப்பாடா” என்று அதை ஓட விட்டவள் சிறுது நேரம் அதில் கண் பதித்து தன் பயம் மறந்தாள். தன் பின்னால் யாரோ நிப்பது போல உணர்வு எழ சட்டென்று சோபாவில் இருந்து எழுந்து நின்று நெஞ்சில் கை வைத்து திரும்பி பார்த்தாள். யாரும் இல்லை .. “

ச்சே பிரம்மை “ என்று தலைய குலுக்கி நிலைக்கு வந்து சாப்பாட்டு மேஜையில் இருந்த தண்ணீர் எடுத்து அருந்தினாள்.

“டிக் டிக்..” என்று தொலைக்காட்சி ஒலியை மீறி காதுக்குள் ஒலித்த கடிகார ஒலி கூட அவளை பயம் கொள்ள செய்தது.

பயத்துடன் இருந்தாலும் சற்று நேரம் சென்றதும் வயறு எனக்கு ஏதாவது போடு என்றது ..”ஹ்ம்ம் என்ன வச்சுட்டு போனாங்க தெரியலையே என்று யோசித்து கொண்டே அடுக்களை பக்கம் சென்றாள்.. தோசை மாவு இருப்பதை பார்த்தவள் சாம்பார் இருக்கா என்று பார்த்து உறுதி செய்து கொண்டு தோசை சுடலாம் என்று ஆரம்பித்தாள். கழுத்தை சுற்றி போட்டு இருந்த ஷால் இம்சை பண்ண “ச்சே இது வேற என்று உருவி பக்கம் இருந்த குளிர் சாதன பெட்டி மேல போட்டவள் நிம்மதியா ஒரு பாட்டை ஹம் பண்ணிக்கொண்டே திரும்பினாள்...

”.பட்” என்று எங்கும் இருட்டானது ஒரு நிமிடம் கண்ணை மூடி கத்த போனவள் வாய்க்குள் தன் குரலை அடக்கி ஒரு கண் மட்டும் திறந்து பார்த்தாள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.